Wednesday, November 30, 2011

வாழ்வின் ஒளி

 
 முத்துகள் சிப்பிக்குள் தானே
தஞ்சம் கொண்டது, உன்னில் ஏன் ?
மென்மைக்கு பாடம் சொல்லும் 
செவ்விதழில் முந்தி நிற்குது.

 


நீ கண்ணயர்ந்து தூங்கையில் 
என்நாள்  ஏன் இரவாகுது ?
உன் இமையே  என்  முகிலோ   !!!

முறையற்ற எழுத்துக்கள் 
பயன்தராது வார்த்தைகளில்,
உன் அலைபாயும் கூந்தல் ஏன் 
வலை வீசுது நெஞ்சத்தில்!!
 

பூம்பெழில் மலர்போலே 
பூவான தமிழ்ப்பெண்ணே !
என் கையில் கனியானாய்!!
நம் வாழ்வின் ஒளியானாய்!

1 comments:

  1. Good description about a girl, lover. neenga kaadhal pannitu iruntha, en vaalthukkal.

    neatly presented !!!

    ReplyDelete