Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, July 31, 2015

புல் என்னும் ஆசிரியர்



 வாழை

நெருங்கியது தீபாவளி.கோயம்பேடை நீண்ட அசௌகரியத்துக்குப்பின் அடைந்தேன்
அரசு பேருந்துகள் ஹவுஸ் புல் போடாத குறையாக இருந்த அனைத்திலும் மக்கள் தலைதவிர வேறொன்னும் காண இயலவில்லை.

தனியார் பேருந்து நிறுத்தம்.
கூவி கூவி அழைத்தார்கள்.
டிக்கெட் காகிதத்தில் மூன்றிலக்க எண்ணில் தொகை யிட்டு நீட்டினர்.
நாம் ஒன்றும் செவ்வாய் கோளுக்கு பயணச்சீட்டை கேட்கவில்லையே,பிறகேன் இத்துணை கிராக்கி?.இதை அவனிடம் கேட்க முடியுமா,? போடா வெண்ணை என்று துரத்தி விட்டாலும் பரவாயில்லை மண் தூற்றி பாட்டான் பூட்டன் வரை இழுத்து இலவு கொட்டிவிடுவான்கள்.

அதற்கு பணம் போனாலும் பரவாயில்லை எனும் அக்மார்க் தமிழனின் தன்மாணப் பண்போடு,நீட்டி முழக்கி வாங்கி வண்டிக்காய் காத்திருக்க ,சுண்டக்காயில் சீட் தைத்து எஞ்சின் பூட்டியது போல ஒரு பஸ்.அதன் பேர் பஸ்ஸாம் அவர்களே அங்ஙனம் சொல்லிக்கொண்டார்கள்.
தொலையுங்களடா க்ராதகர்களா, என ஏறி அமர்ந்து பயணம் துவக்கினால்,இருந்த இடத்திலிருந்து பேருந்து நிலையம் விட்டு வெளியே வர இரண்டு மணி நேரம்.அட இதுஎன்னடா அந்த ஏழுமலையானுக்கு வந்த சோதனை, வியக்க இயலவில்லை கோபித்தும் பயனில்லை, படுத்து தூங்கவும் வழியில்லை, உலகை இருட்டா வழியில்லையா என யோசித்தேன்.விழிகள் மூடிக்கொண்டேன்.

அந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் மைக் கட்டி அம்பாசிடர் காரில் வலம் வந்து அறிவிப்பார்கள் ,"தமிழ்நாடு தமிழ்நாடு தங்கத் தமிழ்நாடு, அண்ணா வாங்க அம்மா வாங்க,எத்தனையோ செலவு,அந்த செலவோட ஒரு செலவு. மலைக்கோட்டை மாநகராம் திருச்சி கேஏஎஸ் ராமதாஸ் ஒரு கோடி ரூபாய் சூப்பர் பம்பர் குலுக்கல்".அந்த குலுக்கலை எல்லாம் தடை பண்ணின அரசுக்கு , இந்த குலுக்கலுக்கு ஒரு சடைகூடப் போட வக்கற்ற நிலையை எண்ணி சிரித்தேன்,'குலுங்கிக் குலுங்கித்' தான்,ஆனால் அது என் மனப்பயன் வினையன்று.


விடிகாலை.
என் அருகமர்ந்தவரைக் காணோம்.இறங்கியிருப்பார்.
ஊர் வரப்போகிறது.இறங்க ஆயத்தமானேன்.
காலனி தேடுங்கால் காலில் தட்டியது,மணிபர்ஸ்.
அதில் என் அருகமர்ந்தவரின் அடையாளச்சீட்டுகள்.
கத்தையாகப் பணம்.
நான்கிலக்கத் தொகை!!
தட்.......கடவுள் இருக்கான்டா கொமரு மொமன்ட்...!

விரிச்சோடிய வீதியில் , வரவேற்றன பூட்டிய கேட்டுகள்.
முகம் பார்த்து , எடை பற்றின அன்னையரின் சில பரிகாசத்துக்குப் பின்,
அப்பாடா,இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,போய் கட்டிலில் விழுந்த போது, கட்டில் என்னைப் பார்த்து இவ்வணம் எள்ளியிருக்கலாம்.

விடி,அதி அடைமொழிகளை இழந்த வெறும் காலை வேளை.அந்த நான்கிலக்கத் தொகையை வைத்து நகைக் கடை தொடங்கி,அது நகைக் கடலாகி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்ற ஒற்றுமை கொண்ட அமித்தாப் பச்சனையும், போனால் போகிறதென்று,அவருடைய மருமகளாகிப்போன என் முன்னாள் காதலியையும் அழைத்து திறக்க வைத்து, என்னைக் வேல வெட்டி இல்லாத வெளங்காத வெளக்கெண்ண! என்று விளித்த அந்த பழைய ஹவுஸ் ஓனர் மூஞ்சில கரியப் பூசி, பார்ரா பார்ரா!! என்று கொக்கரித்து ஒரு முப்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.அக்கையர் தொல்லையிடாதிருந்தால், இன்னொரு இருபது வருடங்கள் தாண்டி வாழ்வும் முடிந்திருக்கும்.நிறைவாய் ஒரு சுபம் போட்டிருக்கலாம்.
நான் இவ்வளவு நேரம் தூங்கினாலே அந்த அக்கையாரின் மூக்கி்ல் உஷ்ணம் ஏறிவிடும்.

காலை உண்டிக்கு இலை வேணுமாம்.அதுவும் வாழைஇலை.அதுவும் கிழிசல் வராத  கருப்பண்ண கவுண்டர் தோட்டத்து தலைவாழை இலை தான் வேணுமாம்.அந்தாளு பெண்ணுக்கும் அக்கையாருக்கும் கொஞ்சம் நொரண்டு.அவர் வெடுக்கென்று பேசிவிடுவார், இவர் படக்கென்று சாத்திவிடுவார்,கதவையும் தான்.பள்ளித் தோழிகள் வேற.

வாழைத் தோட்டம்.
வாழைமரம் என்பது நெடு நெடுவென வளர்ந்த ஒரு சாதாரண புல்தான்.
ஒவ்வொரு வாழை மரமும், தனக்கு வேண்டிய உணவை மட்டும் தானாகவே எடுத்துக் கொள்கிறது.அவை வாழ மண்ணையும்,வளர மழையையும் இறைவன் தருகிறான்.அவசியத்தைத் தாண்டி,அவைகளின் தேவை அமைவதில்லை. தேவைகளைத் தாண்டி துளி நீரையும் தொடுவதில்லை.மிக முக்கியமாக இரண்டு தலை சிறந்த பண்புகள்,

#நீங்கள் வெட்டியே சாய்தாலும்,மீண்டும் வளர்ந்து உங்களுக்கே சத்தான வாழைப்பழம் தரும்.
#அடுத்த மரம், பக்கத்து மரம் எதிர்மரம் எதி்லிருந்தும் தன் தேவைகளுக்காக கடுகளவு ஆற்றலையும் எடுப்பதில்லை, பிடுங்குவதில்லை,தொடுவதுகூட இல்லை.

ஆனால் நீ??
கை கொட்டி சிரிப்பது போல ,காற்றில் இலை யாட்டி ஒலி எழுப்பியது.


-அரண்
தேன்மழை


Don't be ego on others.  Try to grow yourself with your own. Don't spend on others for your growth

Saturday, January 24, 2015

வடிகால் இல்லாக் கழனியிது!



அழுகையாகத் தான் வருகிறது .பிறகு வீட்டுக்குள் இருந்த அனைவரையும் அந்த பாம்பு கடித்து செத்துப் போனால் கையறுநிலையில் வேறென் செய.அது ஒரு ராஜநாகம் .

Monday, January 19, 2015

கழுவச் சேர்வை-உண்மை முகங்கள்!

கடவாப் பல்லில் கறித் துண்டு மாட்டிய அவஸ்தையை அனுபவித்ததுண்டா?
பல்லிருப்பவர்களுக்குத் தெரியும் அந்த கொடுமை!

Saturday, January 17, 2015

நோயும் தருவாள் சங்கீதா!-Desi Maane!

மேல் தட்டு மக்கள் கேட்டறியாத நோய்களுள் ஒன்று
எச்சில்புண் .
வாயில் உதடுகளின் ஓரத்தில் நீர்க்கொப்பளமாக ஆரம்பித்து பின் புண்ணாக மாறுவது.
உயிர் போகும் வலி வேறு வந்து தொலைக்கும்.
நான் சங்கீதா உணவகம் போன போது பார்த்தேன் .
பகீரென்றது.

வடநாட்டுக்காரன்.அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் எது எனத் தெரியவில்லை.ஆனால் அந்த சைனா முகம் இவற்றுள் ஏதோ ஒரு ஊர்க்காரன் என்பதை உணர்த்தியது.
பல்லெல்லாம் கரை.பான் மசாலாவோ பீடாவோ.வாயோரத்தில் அந்த கருமம் வேற.

அவன் என்ன சாப்பிடறீங்க எனக் கேட்டது,எனக்கு "இவாளுக்கு ஹெர்பெஸ் மசாலா ரெண்டு செட் பார்சல் " என்று அவன் சொல்வது போலவே கேட்டுத் தொலைக்கிறது.

பிரஞ்சு கிஸ் பார்த்திருப்பீர்கள்.அப்படி எல்லாம் வாயை வைத்து நாக்கை சுழட்டினால் தான் இந்த பாழாப்போன புண் வருமென்பதில்லை.
அட சும்மா , வாயோரத்தில் 'பிக்கியதுயா',சொறிகிறான்!,அதே கையில் ரெண்டு இட்லி எடுத்து வைத்தாலே போதுமே சங்கு சத்தமில்லாமல் வந்து சேர்ந்திடுமே.நிற்க .

அவன் ஆர்டர் கேட்டான்.பேந்த பேந்த முழித்தேன்.பிறகு சொல்லியும் ஆகிவிட்டது.
கொண்டு வந்து வைத்தும் விட்டான்.திங்கலாமா வேண்டாமா ?.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவன் பலருக்கும் சப்ளை செய்து,அந்த பலரும் பிரக்ஞையேதுமில்லாது உண்டுகளிப்பதைக் கண்டேன்.பிறகென்ன ,செவல ,தாவுடா தாவுதான்.

சிறு நம்பிக்கை .
ஆனால் நான் அவனை கவனித்துக் கொண்டுதானிருந்தேன்.நான் ஆர்டர் கொடுத்ததிலிருந்து,மேசையில் கொணர்ந்துசேர்க்கும் வரை. அவன் கை வாய்க்குப் போக வில்லை .
அதுதான் அந்த சிறு நம்பிக்கை .

சங்கீத உணவகம்.எவ்வளவு பெரிய சங்கிலி உணவகம்.ஒரு தோசை அம்பது ஓவாக்கு விற்கும் அவர்கள் , அவர்களின் லாபத்துக்காக குறைந்த சம்பளத்தில் எவனையாவது பிடித்துப் போட்டுவிட்டு ,வருபவர்களையே நோயாளியாக்குவது ,
நியாயமா.....ஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ரேஏஏஏஏ........?.

அங்கேயே நிலைமை இப்படி கதகளி ஆடினால்,கையேந்திகளை நினைத்துப்பார்க்கிறேன்.
நல்ல சோறு நல்ல காத்து நல்ல சனங்கள் இல்லாத ஊருக்கு பேர் நரகம் என்பார்கள் . அட டா,சென்னை இவ்வளவு சீக்கிரம் நரகம் ஆகுமென நான் எதிர்பார்த்ததில்லை.

சின்ன வயது .
'நான்' தனம் உருவாகாப் பருவம் .
ஒரு முறை நான் கீழ்சாதி தோழன் வீட்டில் தின்று விட்டேன் .என்ன சாதி என்பது இவ்விடத்தில் தேவையற்றது .
சோறும் பருப்புக் குழம்பு என நினைவு .
இரவு உண்டி அது .
என் பொற்றோருக்கு அது தெரிந்ததும் , குறிப்பாக தகப்பனாருக்குத் தெரிந்ததும் ,ஆடினாரே ஒரு ஆட்டம் ,ஆட்டனத்தி ஆதிமந்தி கூட அப்படி ஆடியிருக்க மாட்டார்கள் .
தின்றது வயிற்றுக்குப் போய் செறித்திருக்கக்கூட இருக்காது ,என் தோழன் வீட்டு சோறு ,அதற்குள்ளாகவே எந்தை என் இடக்கையில் முத்தமிட்டார்,அங்கு உண்டதற்காக ,
பழுக்கக் காய்ச்சிய கம்பியில்.!
இப்போது யோசிக்கிறேன்.

"அவா""ஆத்து"களிலேயும் இப்படித் தானே.
அபச்சாரம் என்பாளே .
அது எப்படி கீழ்சாதி காரன் அபச்சாரம் ஆவான் ,ஆனான்? .
கிருமிகள் ,தொற்றுகள் அதிகம் புழங்குவது அங்கு தானே! .

வாழ முடியாத கூடாத இடம் ;
மலிவான விலையில் கிடைக்கும் எந்த உணவும் சோறோ களியோ தின்று ;
மனமே அற்று ,அல்லது கண் போன போக்கில் மது மாது போதை என வாழும் , இன்னும் ஒரு படி வெளிப்படையாக சொல்வதானால் சாக்கடையில் வாழ்விடம்!,
பாக்டீரியா வோ ,வைரஸோ ,இன்னபிற பாராசைட்களோ இல்லாமல் போனால் தான் ஐயப்பட வேண்டும் .
ஆக அவன்  வாழ்க்கை அன்றாடம் காய்ச்சியாக ராக்காசியாக இருப்பது தானே அவனை தீட்டுக்காரன் தீண்டத்தகாதவன் ,அபச்சாரம் ஆக்கியது .

வரணாசிர தர்மம் என்ற பேரில் அவனை அவ்வண்ணம் ஆக்கியதே ஜெர்மன் மேட் "அவா"தானே .
தங்குண்டி சொகுசு வேண்டி அவனுக்கு பழசைத் தந்தார்.?அம்பிகளா?

தயை கூரு!,தமிழன் என்று தலைநிமிர உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது ?வெங்காயம் !என்குது என் நெஞ்சு .எவனுக்கோ "ஆண்டே""எசமான்"போட்டு அடிமையாத் தானே இருந்த !
புலவன் புலம்பலும் ,கவிஞன் கழித்தலும் என்ன பெரிதாக கழட்டிப் புடுங்கியது.
மலத்தை அள்ளி முறத்தில் போட்டதா?
அன்றியும் அந்த போதை வாதியின் பலக்கை.. புளுத்த குறி அரிப்பை சொறிய தமக்கை! ஏன் தம்மகளே கூட!!..என அடிமை அடி பட்டு,அடி மட்டயே நீ   அடைந்தது என்ன ?

என் நெஞ்சே !
அறிவே தமிழனுக்குத் தரப்படவில்லையே.ஏன் எதற்கு கேள்வி கேட்டுவிடுவான் என என் இனத்துக்கே கல்வியை மறைத்து விட்டு புலையன் கீழ்சாதி என்று கூறுவதில் யாருக்கு எப்படியோ எனக்கு உடன்பாடில்லை.அன்று எந்தை வைத்த அந்த சூட்டை நினைத்துப் பார்க்கிறேன் .
வலிக்கவே இல்லை .
என் தோழனின் அந்த கள்ளமற்ற சிரிப்பு அதனை சில்லென்றாக்கிவிடுகிறது.பிறகு எப்படி சுடும் வலிக்கும் .தோழ் அல்லவா,என் தோள் அவன்.

                        எனக்கு அந்த பூணூல் பூனைகள் கண்டால் என்றுமே வியப்பாக இருக்கும்.
௧.
மனத்தை உணர்ந்தார்.

௨.
அதை அடக்கும் வழியறிந்தனர்.

அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றை கவனித்துப்பாருங்களேன்.ஆடல் ,பாடல்,இசை ,எழுத்து ,படிப்பு,கடவுள் கட்டமைப்பு என ஒவ்வொன்றும் ,I don't see a dalit singing carnatic or dancing bharatham over the period of pre independent era.நாம் பாடும் நாட்டுப்புற பாடல்களையும்,"அவா"க்களின் பாடல்களையும் நினைத்துப்பார்க்கிறேன்.மன வசியம் ஏனோ அவாக்களிடம் got struck.

௩.
அறிவே ஆயுதம் என்பதை அறிந்தனர்.

௪.
அவர்கள் நினைவு -இம் மனிதக் கடலில் , நான் நன்கு  வாழ ,அடி தடி அல்ல அதிகாரம் மிக அவசியம் .அடுத்தவன் கீழ்நிலை அடைந்தால் நாம automatically மேனிலை எய்திவிடலாமே!
அதற்காக ஒரு கடவுளையும் உருவாக்கிக் கொண்டனர்,சாத்திரம் ,சம்பிரதாயம் ,சாம்பிராணி இன்ன பிற.

இவையெல்லாம் எப்படி தெளிவாக இத்துணை நூற்றாண்டுகள் கடந்தும் ,அடி மேல் அடி என நடித்து,படித்து ,நாட்டையே பிடித்தும் வைத்திருக்கும்
"அந்தநார்"களை எண்ணுங்கால்,அடேயப்பா!அறிவுக்கு இவ்வளவு சக்தியா?
இப்போது நான் அந்த சங்கீதா ஊழியனை எண்ணுகிறேன்.அவனுக்கும் அந்த அறிவு இருந்திருந்தால்?

எனக்கு தோன்றுகிறது"அந்த சங்கீதா ஓட்டலையே .............",வேண்டாம் இது எனக்கே ஓவராகப் படுகிறது .அதனால் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .


கொக்கு விரட்டி
தேன்மழை

Sunday, December 14, 2014

கழுவச் சேர்வை -புது கட்சி-மது-முத்தப் ????-வறட்சி!

பெரியார் அண்ணா காலம் , அதற்கு முன்பாக கூட இருக்கலாம் . மக்கள் பணி , பொது சேவை என்று எப்பிள்ளையாவது கிளம்பினால், அவ்வளவு தான் சீவக்கட்டையை தூக்கிக் கொண்டு வந்து விடுவார் அன்னையார்.

Thursday, December 4, 2014

மரணம்

உடல் உண்மையிலேயே வியப்பான. பல செயல்பாடுகளின் கூட்டமைப்பு .எண்ணற்ற செல்கூட்டங்கள்.அவையெல்லாம் நீடுதுயில் நீட்டிப்போனால்,என்ன ஆகும் ???ரணங்களில்லாம் மாபெரும் ரணமல்லவா?,-மரணம் ! 

அதிலும் பிண்டம் இரவு வீட்டில் இருக்குமானால், துக்கம் தொண்டையை அடைக்கும் அச்சமயம் தூக்கம் கண்களை அழுத்தும் அல்லவா ?

நிம்மதியான உறக்கத்துக்கு குறட்டை ஒலி கிடையாது .உண்மையில் உறங்குபவன் அந்த  ஒருவன் தான் .

Wednesday, November 26, 2014

கழுவச் சேர்வை -இசை-சிபிலிஸ்-மனம்-facebook!

இந்த சமுதாயத்துக்காக நம் அடையாளங்கள் பல மாறியுள்ளது .உண்ணும் உணவாகட்டும் ,உடுத்தும் உடையாகட்டும்,ஏன் போகும் கழிவறையாகட்டும்.உங்களை, என்னை இந்த சமுதாயம் பல இடங்களில் செதுக்கியுள்ளது.தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் நான் எனும் பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஆனால் பாருங்க,அந்த நான் தன்மை செயற்கையானது.எப்போதும் மனம் இயற்கையைத் தானே நாடும்!!!

அல்லவா?
T எனும் சுயம் அழியும்  போது,அது வரை ஒளிந்திருந்த உண்மையான நாம் வெளிவரும் ,சமூக முக மூடி அழிந்து .இதைத் தான் காமம்,காதல்,புகை ,மது இன்ன பிற போதை வஸ்துக்களும் தருகிறது .மனமும் அதையே நாடுகிறது .விளைவு -மனிதன் அடிமை.ஆனால் நண்பர்களே!
இசையும் இந்த வரிசையில் தான் உள்ளது .அதைக் கூட உபயோகிக்கலாம் ,மனமும் உடலும் அடிமையாகாமல் சுதந்திரமாகவே !
**********----------------------

Annular Secondary Syphilis.பால் வினை நோய்.
பொதுவாக சிபிலிசு என்றால் பிறப்புறுப்பில்தான் புண் வரும் என்பார்கள் .இது அதில் வேறுபட்டது.
செந்தடிப்புகள் தோலில் எப்படி இருக்கிறது பாருங்கள் .
ஆனால் நான் சொல்ல வந்தது இந்த வேற்றுமையல்ல!
சிபிலிசே நம் நாட்டுக்கு வேற்றுமையானது .
It was a time of world exploration and Europeans took the disease to Calcutta in 1498,பிறகு தான் நம்மூரில் எல்லாம் படம் காட்ட ஆரம்பித்தது அந்த சிபிலிஸ் .
இதை நம்மூரில் எப்படி அழைத்தார்கள் தெரியுமா ,?
நம் ஊர் கிடக்கிறது , சிபிலிஸ் பிறப்பெடுத்த ஐரோப்பாவில் என்னவெல்லாம் சொல்லி அழைத்தார்கள் தெரியுமா ?
The French called it the ‘Neapolitan disease’, the ‘disease of Naples’  or the ‘Spanish disease’, and later grande verole or grosse verole, the ‘ great pox’, the English and Italians called it the ‘French disease’, the ‘Gallic disease’, the ‘morbus Gallicus’, or the ‘French pox’, the Germans called it the ‘French evil’, the Scottish called it the ‘grandgore‘, the Russians called it the ‘Polish disease’, the Polish and the Persians called it the ‘Turkish disease’, the Turkish called it the ‘Christian disease’, the Tahitians called it the ‘British disease’,
in India it was called the ‘Portuguese disease’,
in Japan it was called the ‘Chinese pox’, and there are some references to it being called the ‘Persian fire’
இதில் கவனித்துப் பாருங்கள் ,
ஒவ்வொரு நாட்டுக்காரனும் பகை நாட்டின் பேரை சிபிலிஸுக்கு வைத்திருக்கிறான்கள் .(றார்கள் )
பாத ரசத்தைத் தடவியும் மாத்திரையாகத் சாப்பிட்டும் இரண்டு நூற்றாண்டுகள் (16முதல் 18வரை)விழுங்கியிருந்திருக்கிறார்கள்.
பிறகு ஆர்சணிக் ,அப்புறம் தான் பென்சிலின் வந்து தீர்வு கட்டி யிருக்கிறது .
பாதரச வைத்தியம் நடப்பில் இருந்த போது ,அதன் வைத்திய முறையை இப்படிக் குறிப்பார்கள்.
“A night with Venus, and a lifetime with mercury”
இதில் விசேசம் ,
ஆர்சணிக் கண்டு பிடித்த எர்லிச்க்கும் பெனிசிலின் கண்டுபிடித்த பிளமிங் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
அப்படி யானால் பாதரசம் கண்டு சொன்னவனை ஏன் மறந்தார்கள் என்றால்
Neuropathies, kidney failure, severe mouth ulcers and loss of teeth, and many patients died of mercurial poisoning rather than from the disease itself.
இது மாதிரியான பக்க விளைவுகளாலா?என்றால் ,
நிச்சயமாக இல்லை .
அதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது .
பாத ரசம் பயன்படுத்தப்பட்ட 16ஆம் நூற்றாண்டில் நோபல் பரிசு என்பதே இல்லை .
அப்படியே இருந்திருந்தாலும் மேற்சொன்ன பக்க விளைவுகளால் மறுக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளது .
பாதுகாப்பாக, பத்திரமாக , ஒரே அடியில் சிபிலிஸை வீழ்த்தி ,இனி வேறு எந்த மருந்துகளும் தேவையில்லை என்ற நிலையை பெனிசிலின் உருவாக்கி விட்டது .
அதனால் சிபிலிஸின் ஆட்டம் கட்டுக்குள் கொணர்ந்து கக்கத்தில் சுருட்டியாகிவிட்டது.
இதைப் போல  எய்ட்ஸ்க்கு நிகழ இன்னும் இரண்டு நூற்றாண்டு காக்க வேண்டுமா என்றால் ?
நிச்சயமாக இல்லை !
தற்கால ஆய்வுகளில் தெரிவது ,
அதை விட அதிகமாகத் தான் காக்க வேண்டும் .
ஆதலால் காக்க வேண்டியவைகளைக் காத்துக் கொள்ளுங்கள் , காக்கைகளும் காத்துக் கொண்டு தான் இருக்கிறது ,கவ்விக் கொண்டு போக!!!
***********----------------------
புகைப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் .
சினிமாவே பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பவன் கூட இந்த வாசகத்தை எங்கேனும் , ஏன் அந்த சிகரெட் டப்பாவிலேயே கூட கண்டிருக்க முடியும் .
உலகில் அதிகம் பேரை அடித்துத் தின்னும் புற்று எது என்று கேட்டால் அது பஞ்சு போன்று மென்மையான நுரையீரலின் புற்று தான் .
ஆனால் அது மருந்து மாத்திரைகளில் அடங்கிவிடுவதில்லை .
தொழில் நுட்பம் தூங்கியிருந்த காலத்தில் வேண்டுமானால் சரி , இப்போதும் 'கட்டி யிருந்தால் வெட்டிப் போடு 'என்ற நிலை எப்படி சரியானதாகும்.
Crizotinib
இந்த மருந்து சமீபத்திய வரவு.ROS1 proto-oncogene receptor tyrosine kinase (ROS1) வேலையைத் தடுப்பானிது.நுரையீரலில் வரும் பெரும்பான்மைப் புற்றான non–small-cell lung cancers (NSCLCs)களை குணமாக்க வல்லது.
***********---------------------

கமகமக்கும் கட்டிலில்
அணைந்தது காமத்தீ
-முதலிரவு !
**********----------------------
நாயில்லாத வீடுகளில் கயிறோ கல்லோ தேவையில்லை.எண்ணிப் பாருங்கள் ,நீங்கள் நாயோ பூனையோ எலியோ வீடுகளில் வளர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.எதுவும் செய்யாது சும்மா விட்டுப் பாருங்கள்.வெறுமனே அவுத்து விட்ட கண்ணுக்குட்டியாட்டம் தான் ஆட்டம் போடும் .அதை அடக்க நீவிர் ஏது செய்வீர் ?,
சங்கிலியோ கயிறோ வசதிக்கு ஏற்றாற்போல கட்டிப் போட்டு கம்முனு கடக்கச் சொல்லிவிடுவீர்கள் !
அல்லவா?
அந்த நாயும் பொட்டாம் பொதிகாளையாட்டம் கொடுத்த பணிமுடித்துப் பண்ணாட்டுப் பண்ணாமல் போய் படுத்துக் கொள்ளும் .
இளநெஞ்சே ,
எண்ணிப்பார் !
மனமே இல்லாதவனுக்குக் கோயில் என்ன? கடவுள் என்ன ?
அல்லது காரித் துப்பும் (80களில் அக்காலப் பாட்டிகள் புளுச் புளுச் என ஒரு டப்பாவில் துப்புவார்களே ,அந்த டப்பாவின் பேர் தெரியவில்லை ,ஆனால் அது தான் நான் இங்கு கூற வருவது )டப்பாவோ
தான் என்ன ?
எல்லாம் ஒன்னு தான் வெறும் மண்ணு தான் .
இருந்தும் பயண் தரா!!!!!!!
***********----------------------
நிறக்குருடுகள் .
நம்மூர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பவை .
மேலை நாடெகளில் சகஜம் .
அதிலும் இந்த சிகப்பு பச்சை கலவை நிறக்குருடு பாவத்திலும் படு பாவம் .
sex chromosome பிறழ்வுகளால் தொற்றும் இந்நோய் பெண்களைத் தொடுவதில்லை.
ஆணுக்கு ஒருxஒருy
பொண்ணுக்கோ இரண்டும் x
அதில் ஒன்று பிழையானால் என்ன ?
சமீபத்தில் கூட Whatsapp இல் நீள வண்ணம் ஒளிர்வால் பிரச்சனைகள் பல உருவாகிறது என கூக்குரல்கள் பல எழுந்ததே !
சொல்ல மறந்து விட்டேன் ,பாவப்பட்ட அந்த சிவப்பு பச்சை நிறக்குருடுகளுக்கு ஒரு தீர்வும் இருக்கிறது .
"பார்ப்பதை எல்லாம் நீளமாக்குக!!"

-தேன் !
(இதை நான் எழுதி முடித்துத் தலைப்பிடுகையில் கொக்குவிரட்டி ஙே என முழித்தான்.ஒன்னியும் புர்லையே என்றான் .அட விரட்டிப் பயலே கடலில் இருந்து எடுக்கும் முத்துகள் சுத்தமாகவா இருக்கும் என கேட்டேன் .கலீஜா தான் இருக்குமென்றான் .பிறகெப்படி சுத்தமாக பளிச்செனக் கோவையாக்கி முத்து மாலையாக கழுத்தில் அணிய முடிகிறது என்றேன் .அது ,சுத்தமாக க் கழுவி ஒன்னு ஒன்னாச் சேர்த்து மாலை யாக்கிக்கலாம் என்றான் .என்ன செய்வாய் கழுவி சேர்ப்பாயா?
இப்போது தலைப்பைப் பார் ! என்றதற்கு ,
கொக்கு விரட்டியின் தலையில் பல்ப் எரிந்தது !)

கழுவச் சேர்வை = Random thoughts

Sunday, November 16, 2014

குரங்கு மனுசா!-@Random Thoughts

இது நடந்தது சுமாராக 4லட்சம் வருடங்களுக்கு முன்
.மனிதனுக்கும் குரங்குக்கும் நிகழ்ந்த கருத்து வேற்றுமைகளில் முதன்மையானது ,"முடியும் ,முடியாது"!.முடியாதென்றவர்கள் இன்றும் வயிற்றுப் பிழைப்புக்கு 'அடுரா ராமா 'தான் போட்டுக் கொண்டுள்ளார்கள் சாலையில் .ஏனையோர் வேலையில் ,ஓலையில் !
சங்க காலத்தில் பேப்பர் இருந்ததா என்ன ..?(ஓலை =பேப்பர் )
 ----------------------------------------------------------------------------------------------------------

மூங்கிலென்ன முகிலென்ன?
ரோஜாவின் இதழன்ன!
மெல்லிதழ் கள்வ!நின்!
பன்னீரின் இதந்தன்னில் !
குத்திய முள் மறந்தேன் .
-மீசை !

=================================================================

மூடி வைத்தல்-

எங்காவது சாப்பாட்டை மூடி வைத்து சாப்பிட்டுப் பார்த்ததுண்டா?
இல்லை,
எங்காவது அழுகிய ஊசிப்போனப் பண்டத்தை மூடாமல் வைத்துப்பார்த்ததுண்டா?
இரண்டும் பட்சணங்கள் தானே!
ஆனால்,
அதே உணவை இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது மூடித்தானே எடுத்துப் போகிறோம் .மூடாமல் போனால் பிறகு அது காக்காய் கழுகுகளுக்குத்தான் இரையாகும் .
அப்படி ஒரு பண்டம் பெண் உரு எனக் கொள்க!
மகளிர் தமக்கைகளே,தயவுசெய்து மூடிக்கொள்ளுங்கள், காக்காய் கழுகுகள் பல ஊளையிட்டே உலவுகின்றன ,கவ்விட்டுப் போனபிற்பாடு கூப்பாடு போட்டாலும் போச்சே போச்சே வட போச்சே  தான் .

###########################################################################

ஈன்று புறந்தருதல் எல்லா தாய்மார்கள் கடமை .அந்த மகன் உலக மக்கள் ,தன் சமுதாய மக்கள் மெச்சும் படி தீங்கிழைக்காத நல்வழி நடக்கும் மனிதனாக்கி அறிவடைத்துக்காக்க கடவது தந்தை .அது அவரின் பிறவிக் கடன் .அதாவது நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ ஆவாயே ஆனால் இச்செயல்கள் தானாகவே இயங்கிக்கொள்ளும்.
ஒரு கேள்வி தோன்றுகிறது .அப்படியானால் ஒரு இளைஞன் இளைஞியின் பிறவிக் கடன் யாது ?.அம்மகவைப் பெறல் .
அதற்கு
ஈர்த்தல் ஈர்க்கப்படுதல் இளமையின் பெறும் பொறுப்புஅல்லது கடன்கள் ஆகின்றன .முடிவில் இயற்கை என்னிடமோ உன்னிடமோ யாரிடமும் வேண்டுவது வாழ்வு சங்கிலியின் சுழல் தொடர்ச்சி.

---------------------------------------------------------------------------------------------------------------------

அதுக்கு நீ சரிப்பட மாட்ட !!

உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்குவது என்பது உணர ஆரம்பிக்கிறது.கட்டியவளாயினும் கண்டவளாயினும் காவ காகாவும் ஒன்று தான் ..சொரணையற்ற சடங்கள்.ச்சை இதை விரும்பினோம் ?அருவருப்பாக உள்ளது .ஒரு ஆண் குடிகாரன் ஆவதற்கு ஒரு பெண்ணே போதுமான காரணமாயிருக்கிறாள்.ஆணுக்கோ- போதை அவசியத்திலும் அத்யாவசியமாகிறது.இந்த இழவெடுத்த பிறப்பெடுத்த காரணமோ பல சமயம் உணர்வுகளில் மங்கிவிடுகிறது.சமூகம் பெண்ணை வைத்து காசு பார்த்து கொழுக்க ,அதுவே ஆணின் ஏமற்றத்துக்கு அடிதளமாகிறது.குரங்கு மனதுக்கு சொல் புத்தி கிடையாது ,சுயபுத்தி மட்டும்தான் .சொன்னாப்புரியாது?பித்து பிடித்து தான் போகிறது .அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமானால் டோப்பமைன் ,டெஸ்டோஸ்டிரோன் குவியல் கூடுதல் நிறைதல் நிரப்புதல் .உண்மையான ஆண் பித்தனாகவே வாழ்கிறான் .ஆண்ட இறைவனுக்கும் இது பொருந்தும் .ஆதாம் காலங்களில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் திரிந்த ஒரு மிருகத்தை வெளிச்சம் இல்லாத சத்தம் கேட்காத அறைக்குள் பூட்டிவிட்டோம்.கடமை கண்ணிய கட்டுப்பாடுகளின்  உணர்வலைகள் கதவாக இவ்விலங்கு  சிலிர்த்த போதும் திடமாக இத்தனை காலமும் காத்து விட்டது .ஆனால். இனி?

உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தி வாழும் இக்காலத்தில் .?அக்கதவுடைந்து மீண்டும் ஆதாம் காலம் துளிர்க்கிறதோ என ஐயமாக உள்ளது.

=======================================================================

வலி -

மனித இருத்தல் இயக்கம் இவற்றின் குறியீடு .
சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சும் வலி நஞ்சாகி விடும் .

நாலைந்து வேதிகள் சேர்ந்து மனதில் எழும் வலி இருக்கிறதே!ம்ம்ம்..இதுதான் மனம் எனத்தெரியத்தொடங்கும் நாளிலிருந்து பிடிக்கும் சனியது.

பூங்காகள் சென்றிருப்போம் தோட்டக்காரர் தலையை க்ராப் வெட்டுவது போல செடிகளை வெட்டுவதைப்பார்த்திருப்பீர்கள் ,அது மாதிரி களை யான எண்ணங்களையும் வெட்டியெறிய நல்ல சமுதாயம் நிச்சயம் வேண்டும் .

நல்ல சமுதாயம் என்பது அறிவார்ந்த பெற்றோர் ,கற்ற நண்பர் ,குற்றமில் சுற்றம் என பல குவியல்களின் முகமது .இதில் எங்கு பிளவென்றாலும் ,தொல்லை தனி மனிதனுக்கு மட்டுமல்ல என்பதை இவ்வூர ர் இம்மையில் உணர்வதற்கு குற்றாலீசுவர முயற்சி செய்தாலும் முடியாது .

மனம் பத்திரம் அங்கு தான் உங்களை ஆளும் கடவுள் எண்ணங்களாய் வசிக்கிறார் .

ஆளும் என்ற வார்த்தையை உபயோகித்தேன் ,அதன் பொருள் எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ எதையும் செய்ய வைக்க வல்ல ஆணை பிறப்பிக்கும் அரசு போன்றது .அதனால் அங்கு நல்லவற்றையே காட்டுங்கள் ,தீயவை தீய பயத்தலால் !

-தேன்

~~

Thursday, November 13, 2014

முட்டாளே மேல்!


Lucy-படம் பார்த்திருக்கிறீர்களா?
மனிதன் 100% மூளையை உபயோகித்தால் என்னவாகும் என்று காட்டியிருப்பார்கள்.முக்காலமும் உணரலாம் ,கடவுள் நிலை கூட சாத்தியம் என்பார்கள் .
100%கூட வேண்டாம் ,IQ-140தாண்டினால் நிகழும் விபரீதங்கள் தான் மேலே உள்ள படம் .
அமைதியின்றி,அடிமையாகி ச்சே,இதுக்கு முட்டாளாகவே இருந்திடலாம் போலயே !
பல சமயங்களில் வரம் எது தெரியுமா ?
அறியாமை தான் .
அறிய வேண்டாதவைகள் ,ஏன் தீயப் பழக்கங்களையே எடுத்துக் கொள்வோம் ,எதற்கு இவற்றைத் புரிந்திட முனைய வேண்டும் .இவை எல்லாம் புரிந்து முடிபவை தானா?
அறிய அறிய அடங்காத அரிப்பல்லவா அவை .!
கண் முன் தெரியாமல் கண்டதையும் போட்டு உழட்டிக்கொள்ளவேண்டாம்.மனம் ..........very fragile ...

Wednesday, November 12, 2014

"ஐப்பசி-அய்யோப்பசி!"

10.11.2014
8.45am:

சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!

துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .

..இவை  எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?

10.11.2014
3.10pm:

கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!

வாயிலிருந்து!!!!

வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?

11.11.2014
12.50pm:

அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?

நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!

11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?

மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!

அய்யோ....................!!!!!

11.11.2014
1.24pm:

"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .

அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .

21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.

10.11.2014
9.50am:

"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!

அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!

ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .

நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...

கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!

ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!

த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.

பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...

பஸ் நம்பரா???21L

10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!

போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!

அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.







13.11.2014

மழை வடிந்திருந்தது!.

"அந்த !!"குழியிலும் தான்.

தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!

தேன்மழை