பல்லிருப்பவர்களுக்குத் தெரியும் அந்த கொடுமை!
Monday, January 19, 2015
கழுவச் சேர்வை-உண்மை முகங்கள்!
பல்லிருப்பவர்களுக்குத் தெரியும் அந்த கொடுமை!
Saturday, January 17, 2015
நோயும் தருவாள் சங்கீதா!-Desi Maane!
மேல் தட்டு மக்கள் கேட்டறியாத நோய்களுள் ஒன்று
எச்சில்புண் .
வாயில் உதடுகளின் ஓரத்தில் நீர்க்கொப்பளமாக ஆரம்பித்து பின் புண்ணாக மாறுவது.
உயிர் போகும் வலி வேறு வந்து தொலைக்கும்.
நான் சங்கீதா உணவகம் போன போது பார்த்தேன் .
பகீரென்றது.
வடநாட்டுக்காரன்.அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் எது எனத் தெரியவில்லை.ஆனால் அந்த சைனா முகம் இவற்றுள் ஏதோ ஒரு ஊர்க்காரன் என்பதை உணர்த்தியது.
பல்லெல்லாம் கரை.பான் மசாலாவோ பீடாவோ.வாயோரத்தில் அந்த கருமம் வேற.
அவன் என்ன சாப்பிடறீங்க எனக் கேட்டது,எனக்கு "இவாளுக்கு ஹெர்பெஸ் மசாலா ரெண்டு செட் பார்சல் " என்று அவன் சொல்வது போலவே கேட்டுத் தொலைக்கிறது.
பிரஞ்சு கிஸ் பார்த்திருப்பீர்கள்.அப்படி எல்லாம் வாயை வைத்து நாக்கை சுழட்டினால் தான் இந்த பாழாப்போன புண் வருமென்பதில்லை.
அட சும்மா , வாயோரத்தில் 'பிக்கியதுயா',சொறிகிறான்!,அதே கையில் ரெண்டு இட்லி எடுத்து வைத்தாலே போதுமே சங்கு சத்தமில்லாமல் வந்து சேர்ந்திடுமே.நிற்க .
அவன் ஆர்டர் கேட்டான்.பேந்த பேந்த முழித்தேன்.பிறகு சொல்லியும் ஆகிவிட்டது.
கொண்டு வந்து வைத்தும் விட்டான்.திங்கலாமா வேண்டாமா ?.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவன் பலருக்கும் சப்ளை செய்து,அந்த பலரும் பிரக்ஞையேதுமில்லாது உண்டுகளிப்பதைக் கண்டேன்.பிறகென்ன ,செவல ,தாவுடா தாவுதான்.
சிறு நம்பிக்கை .
ஆனால் நான் அவனை கவனித்துக் கொண்டுதானிருந்தேன்.நான் ஆர்டர் கொடுத்ததிலிருந்து,மேசையில் கொணர்ந்துசேர்க்கும் வரை. அவன் கை வாய்க்குப் போக வில்லை .
அதுதான் அந்த சிறு நம்பிக்கை .
சங்கீத உணவகம்.எவ்வளவு பெரிய சங்கிலி உணவகம்.ஒரு தோசை அம்பது ஓவாக்கு விற்கும் அவர்கள் , அவர்களின் லாபத்துக்காக குறைந்த சம்பளத்தில் எவனையாவது பிடித்துப் போட்டுவிட்டு ,வருபவர்களையே நோயாளியாக்குவது ,
நியாயமா.....ஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ரேஏஏஏஏ........?.
அங்கேயே நிலைமை இப்படி கதகளி ஆடினால்,கையேந்திகளை நினைத்துப்பார்க்கிறேன்.
நல்ல சோறு நல்ல காத்து நல்ல சனங்கள் இல்லாத ஊருக்கு பேர் நரகம் என்பார்கள் . அட டா,சென்னை இவ்வளவு சீக்கிரம் நரகம் ஆகுமென நான் எதிர்பார்த்ததில்லை.
சின்ன வயது .
'நான்' தனம் உருவாகாப் பருவம் .
ஒரு முறை நான் கீழ்சாதி தோழன் வீட்டில் தின்று விட்டேன் .என்ன சாதி என்பது இவ்விடத்தில் தேவையற்றது .
சோறும் பருப்புக் குழம்பு என நினைவு .
இரவு உண்டி அது .
என் பொற்றோருக்கு அது தெரிந்ததும் , குறிப்பாக தகப்பனாருக்குத் தெரிந்ததும் ,ஆடினாரே ஒரு ஆட்டம் ,ஆட்டனத்தி ஆதிமந்தி கூட அப்படி ஆடியிருக்க மாட்டார்கள் .
தின்றது வயிற்றுக்குப் போய் செறித்திருக்கக்கூட இருக்காது ,என் தோழன் வீட்டு சோறு ,அதற்குள்ளாகவே எந்தை என் இடக்கையில் முத்தமிட்டார்,அங்கு உண்டதற்காக ,
பழுக்கக் காய்ச்சிய கம்பியில்.!
இப்போது யோசிக்கிறேன்.
"அவா""ஆத்து"களிலேயும் இப்படித் தானே.
அபச்சாரம் என்பாளே .
அது எப்படி கீழ்சாதி காரன் அபச்சாரம் ஆவான் ,ஆனான்? .
கிருமிகள் ,தொற்றுகள் அதிகம் புழங்குவது அங்கு தானே! .
வாழ முடியாத கூடாத இடம் ;
மலிவான விலையில் கிடைக்கும் எந்த உணவும் சோறோ களியோ தின்று ;
மனமே அற்று ,அல்லது கண் போன போக்கில் மது மாது போதை என வாழும் , இன்னும் ஒரு படி வெளிப்படையாக சொல்வதானால் சாக்கடையில் வாழ்விடம்!,
பாக்டீரியா வோ ,வைரஸோ ,இன்னபிற பாராசைட்களோ இல்லாமல் போனால் தான் ஐயப்பட வேண்டும் .
ஆக அவன் வாழ்க்கை அன்றாடம் காய்ச்சியாக ராக்காசியாக இருப்பது தானே அவனை தீட்டுக்காரன் தீண்டத்தகாதவன் ,அபச்சாரம் ஆக்கியது .
வரணாசிர தர்மம் என்ற பேரில் அவனை அவ்வண்ணம் ஆக்கியதே ஜெர்மன் மேட் "அவா"தானே .
தங்குண்டி சொகுசு வேண்டி அவனுக்கு பழசைத் தந்தார்.?அம்பிகளா?
தயை கூரு!,தமிழன் என்று தலைநிமிர உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது ?வெங்காயம் !என்குது என் நெஞ்சு .எவனுக்கோ "ஆண்டே""எசமான்"போட்டு அடிமையாத் தானே இருந்த !
புலவன் புலம்பலும் ,கவிஞன் கழித்தலும் என்ன பெரிதாக கழட்டிப் புடுங்கியது.
மலத்தை அள்ளி முறத்தில் போட்டதா?
அன்றியும் அந்த போதை வாதியின் பலக்கை.. புளுத்த குறி அரிப்பை சொறிய தமக்கை! ஏன் தம்மகளே கூட!!..என அடிமை அடி பட்டு,அடி மட்டயே நீ அடைந்தது என்ன ?
என் நெஞ்சே !
அறிவே தமிழனுக்குத் தரப்படவில்லையே.ஏன் எதற்கு கேள்வி கேட்டுவிடுவான் என என் இனத்துக்கே கல்வியை மறைத்து விட்டு புலையன் கீழ்சாதி என்று கூறுவதில் யாருக்கு எப்படியோ எனக்கு உடன்பாடில்லை.அன்று எந்தை வைத்த அந்த சூட்டை நினைத்துப் பார்க்கிறேன் .
வலிக்கவே இல்லை .
என் தோழனின் அந்த கள்ளமற்ற சிரிப்பு அதனை சில்லென்றாக்கிவிடுகிறது.பிறகு எப்படி சுடும் வலிக்கும் .தோழ் அல்லவா,என் தோள் அவன்.
எனக்கு அந்த பூணூல் பூனைகள் கண்டால் என்றுமே வியப்பாக இருக்கும்.
௧.
மனத்தை உணர்ந்தார்.
௨.
அதை அடக்கும் வழியறிந்தனர்.
அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றை கவனித்துப்பாருங்களேன்.ஆடல் ,பாடல்,இசை ,எழுத்து ,படிப்பு,கடவுள் கட்டமைப்பு என ஒவ்வொன்றும் ,I don't see a dalit singing carnatic or dancing bharatham over the period of pre independent era.நாம் பாடும் நாட்டுப்புற பாடல்களையும்,"அவா"க்களின் பாடல்களையும் நினைத்துப்பார்க்கிறேன்.மன வசியம் ஏனோ அவாக்களிடம் got struck.
௩.
அறிவே ஆயுதம் என்பதை அறிந்தனர்.
௪.
அவர்கள் நினைவு -இம் மனிதக் கடலில் , நான் நன்கு வாழ ,அடி தடி அல்ல அதிகாரம் மிக அவசியம் .அடுத்தவன் கீழ்நிலை அடைந்தால் நாம automatically மேனிலை எய்திவிடலாமே!
அதற்காக ஒரு கடவுளையும் உருவாக்கிக் கொண்டனர்,சாத்திரம் ,சம்பிரதாயம் ,சாம்பிராணி இன்ன பிற.
இவையெல்லாம் எப்படி தெளிவாக இத்துணை நூற்றாண்டுகள் கடந்தும் ,அடி மேல் அடி என நடித்து,படித்து ,நாட்டையே பிடித்தும் வைத்திருக்கும்
"அந்தநார்"களை எண்ணுங்கால்,அடேயப்பா!அறிவுக்கு இவ்வளவு சக்தியா?
இப்போது நான் அந்த சங்கீதா ஊழியனை எண்ணுகிறேன்.அவனுக்கும் அந்த அறிவு இருந்திருந்தால்?
எனக்கு தோன்றுகிறது"அந்த சங்கீதா ஓட்டலையே .............",வேண்டாம் இது எனக்கே ஓவராகப் படுகிறது .அதனால் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .
கொக்கு விரட்டி
தேன்மழை
Sunday, December 14, 2014
கழுவச் சேர்வை -புது கட்சி-மது-முத்தப் ????-வறட்சி!
Wednesday, November 12, 2014
"ஐப்பசி-அய்யோப்பசி!"
10.11.2014
8.45am:
சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!
துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .
..இவை எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?
10.11.2014
3.10pm:
கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!
வாயிலிருந்து!!!!
வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?
11.11.2014
12.50pm:
அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?
நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!
11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?
மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!
அய்யோ....................!!!!!
11.11.2014
1.24pm:
"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .
அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .
21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.
10.11.2014
9.50am:
"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!
அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!
ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .
நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...
கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!
ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!
த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.
பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...
பஸ் நம்பரா???21L
10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!
போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!
அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
13.11.2014
மழை வடிந்திருந்தது!.
"அந்த !!"குழியிலும் தான்.
தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!
தேன்மழை
Monday, October 20, 2014
இடமில்லை வெளியே போ!
மாரி வருவன் ,
இருநாள் அமர்வன் ,
இடம் நீ அளிக்க
"எம் முன்னோர் சாற்றிய கூற்றும் பொய்யோ!"
அளிக்க ~அழிக்க ஆனது ,காலப்பிழையோ !
இருக்கும் இடம் திரிந்து அனைத்தும் அபகரிக்க ,உறையுள் இழந்து திரியும் நிலை காண்கிறேன் .இது யாவர் குற்றம் ?குன்றும் மாள குந்தித் தின்னும் குறுமதியாளர் குற்றமா?அரசியல் பிழைத்தும் அறம் கூற்றாகியும் அடிசில் தடவி அகம்புறந்த ஆள்வோர் குற்றமா?மண்ணோ மக்கும் மன்பதையும் மக்கும் கூட்டத்தில் மதனவிதனத்தில் களிக்கும் என் போன்ற மதோன்மத்தர்கள் குற்றமா?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
குற்றம் பார்க்காவிடில் பிறகு சுற்றுப்புறமும் இல்லை .
ஆண்ட அவ லட்சணம் ஆழி மழைக் காட்டியும் அனுசரித்து அகழ்வது நிச்சயம் என் குற்றமே -என் செய??? கடவது கடவதுவே, என்றிலாது,கடவுள் தனம் காணும் நாள் எந்நாள் ?
அந்நாளே யாவருக்கும் தீப ஆவளி திருநாள் .அது வரை ???வெடித்துக் குமுறுங்காள் எம்மாக்களே!
தேன்மழை