Wednesday, November 30, 2011

அன்பளிப்பு


நீருண்ணும் உடம்பு; இறுதியில்,
மண்ணுக்கு பரிசாகும்

வாழ்வின் ஒளி

 
 முத்துகள் சிப்பிக்குள் தானே
தஞ்சம் கொண்டது, உன்னில் ஏன் ?
மென்மைக்கு பாடம் சொல்லும் 
செவ்விதழில் முந்தி நிற்குது.

ஆசைத்தீ

அடங்காத நதி குறுக்கே கல்பரப்பிப் போகின்றாய்,

கூந்தல்

காதலுக்கும் கீதம் உண்டு:
வார்த்தை இல்லா ஓசையது.

சுகம்

குளிர் தென்றல் கோவையிலே! சாரல் மழை வீசையிலே!

காதல் பொழுதுகள்

கனவு கண்ணில் இல்லாகிப்போனால்;
கண்கள் வேண்டாம், கனவே போதும் !

உன்னால் முடியும்

மரத்தினை காற்றசைக்கும்; கூடும்
 
மணற்குவி கல்அதனை புனல் அசைக்கும் ;
 

கரும்பினை எறும்பசைக்க;
---மனசே உன்
உருவத்திற்கு என்ன பயன்??????????????????? .
 

புலனடக்கம்

நிலமிசைச் சான்றோரும் மைவழி மக்கட்கு
குலதோங்க உரைத்ததுமீதோ -மடையோய்
புலத் துணர் உந்தன் உயிராய் பெறுதல்
நலத்தோடு நாய் விதி சேர்
                                            -நேரிசை வெண்பா  

Tuesday, November 29, 2011

வரம்

உன்னருகே வருகையில்!
உள்நெஞ்சம் துள்ளுமே!!

அன்றிரவு

அடங்காத ஆசைகள் அசைந்தாடும் வேலைகள்,

Monday, November 28, 2011

பிரிவு

கட்டிக்கொள்ளும் கருத்தோட 
காத்திருக்கும் வேலையில 
கண்மறந்து  காலெடுத்த வேகம்மென்ன ?

வீங்கி போன புண் மனசு 
வெந்துபோகும் கொடுமைஎல்லாம் 
கண்ணால பார்த்த பின்னும் 
பறக்கும் ரெக்கை கொண்டதென்ன ?

புழு நெருப்பில் துடிக்குதுன்னு  
காதெல்லாம் கேட்டிருந்தும் 
நீரில்லா நதிகாட்டி 
காத்தோட போனதென்ன ?

வார்த்தைக்கு அடிமை என்றாய் 
என் கோட்டில் வாழ்வென்றாய் 
ஒரு சலனம் தோன்றியதும் 
பொய்யான தோற்றமென்ன ?

கணமான இதயத்தை 
தாங்குவதுன் கைகள்  தான்
ரண மான இப்போது 
திரும்பாத கரமென்ன?

விட்டில் தான் வெளிச்சத்தில்,
விட்டு விடும் தன்உயிரை !
ஆசை தீ எனை இழுக்க 
அழிவனென்று தெரிந்திருந்தும் 
அடைகாத்து ஆற்றாமல் 
அலை கடலைகடந்ததென்ன ?

விளக்கேத்த போறேன்னுன 
விளங்காம போயிநானும் 
விலங்காக ஆனா பின்னும் 
விரட்டாம நெருப்பெடுத்து
நீ பிடிச்ச ஓட்டமென்ன  ?

ஓடிப்போன கழுதைஎல்லாம் 
ஒரு நாளில் புத்தி பெற்று 
ஊரை நோக்கி ஊர்ந்து வந்தா 
ஆசையெனும் ஆழியிலே 
அத்தனையும்  அழிஞ்சிருக்கும் !
மீதமென்ன அங்கிருக்கும்? -
 ஆனாலும்!!!!!!!!!!!!!!!
குட்டிச் சுவரொன்னுவரவேற்கும்  
பின்ன கழுத கேட்ட குட்டிச் சுவர் தான !!!!!

ஆனந்த கடல்

மழை துளி ஏற்கும் மண்ணின் உருதனை
மணந்தாய் ஏற்றாய் என் மன வடிவே
                           
புண்ணிய நதியாய்  புலன்களை கழுவி

அன்பிலே சேர்ந்தாய் ஆனந்த கடலே


Sunday, November 27, 2011

அன்பு


வாடுமந்த வற்றிப்போன வோடைபார்த்து 
நீலகொண்டை அன்னமே!
நாடியதன் பிணியறுக்க அலகில் சேரும்
கயலும் அந்த வண்ணமே

தேடும் காதல் தெளியவைக்க
நாளும்வேண்டும் நமக்குஇந்த எண்ணமே 
ஏடுசொல்லி எர்க்கதோர் கொள்ளுங்கள் 
அன்பினுக்கு இதுமொரு சின்னமே !!

பெண்சாதி

உயிரில்  என்னில் நீ பாதி !
உடம்பால்  நீயென்  பெண்சாதி!
உறங்கும்போதேன்  போர்வையடி!
உணர்ந்தேன் எந்தன் மூச்சினில் நீ !

ஈன்ற  தாயும், எடுத்தியம்பும் எந்தையும்,
தோன்றும்  கழிவகற்றி வடிகட்டி யாமென் 
வடிவுக்கு அரசியுமாய் நீயாகி ;
ஈனப் பிறப்பெடுத்த என்றன் 
குலம் தழைக்க  குருத்தாய் 
அமைந்த இறையும்  நீ !!!!!

எண்ணம்

எண்ண அலைக் கூரையிலே
  என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
  நட்ட  இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
  கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
  சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
  உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
  தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
  வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
  கடவுளும் நம் அகமல்லோ !!






எயிறு

மாதுளை வரிசைகளில்
தேன்மழை நனைக்க,
என் தவம் செய்ததோ
இதழதை அணைக்க.

 

குறள்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி தழுவப் பெறின்

நரகம்



கருநாகம் காத்திருக்கும் ! தெருநாயும் திரிநரியும்
சதைபிழந்ததை ருசிக்கும் !! மந்தி எள்ளி ,




மதயானை தள்ளி, பாதாளக் கர்கூர்மை
அங்கம் பிளந்து வெந்தழல், அடைவாய்!


(தீய பழக்கத்தை )

மறந்திடு மனமே ! பிறந்திடும் நலமே !!

உயிர்

மேகமகள் வெள்ளிமலர் உத்தரவு 
அடர்வனப் பூங்கா என் நிற 
துண்டு மர இருக்கை நேர் வந்தேன் 
பின்னோர் நெடு மரத்து  உச்சியில் 
வாண்டாய் மந்திக் கூட்டம்  ஆடும் 
தொடை  கண்ணப் பாலம் எழுப்பிய 
பிதாமகனாய் விழிமூடிய ஒருவன் 
அமர்ந்தான் கால் முன் சிறுகுட்டை 
முகம் விளங்கியது ஏனோ வாட்டம்?
பேரிடி அல்ல! : அதன் ஒலியால்!!,
திறந்தவன் விழியில் ஒரு துளி
மீனாய் அடையவும் மனையே ,
வனம் படித்து இனம் படித்து இறுதியில் 
அவன் மனமும் படித்தேன் ஒரு கேள்வி 
அறுகனதிற்கு வெடி மறப்பாய் ஏன்?
ஒரு கனதிற்கோ உயிர் துறப்பாய்!!
விழியொளி சிறுமுருவலோடு பதில் 
நீயார் எங்கிருந்து இவ்வொலி?
கருநிறதிருந்தும் தெரியலையோ? 
பாவம் !! அகன்றேன்  என் பேர் புகை!!!!!!!!!!!!!!!!!!!
 

ஏன்?

பதின் திங்கள் சுகமிழந்து மடியிருந்தது எதற்காக,