Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, July 31, 2015

புல் என்னும் ஆசிரியர்



 வாழை

நெருங்கியது தீபாவளி.கோயம்பேடை நீண்ட அசௌகரியத்துக்குப்பின் அடைந்தேன்
அரசு பேருந்துகள் ஹவுஸ் புல் போடாத குறையாக இருந்த அனைத்திலும் மக்கள் தலைதவிர வேறொன்னும் காண இயலவில்லை.

தனியார் பேருந்து நிறுத்தம்.
கூவி கூவி அழைத்தார்கள்.
டிக்கெட் காகிதத்தில் மூன்றிலக்க எண்ணில் தொகை யிட்டு நீட்டினர்.
நாம் ஒன்றும் செவ்வாய் கோளுக்கு பயணச்சீட்டை கேட்கவில்லையே,பிறகேன் இத்துணை கிராக்கி?.இதை அவனிடம் கேட்க முடியுமா,? போடா வெண்ணை என்று துரத்தி விட்டாலும் பரவாயில்லை மண் தூற்றி பாட்டான் பூட்டன் வரை இழுத்து இலவு கொட்டிவிடுவான்கள்.

அதற்கு பணம் போனாலும் பரவாயில்லை எனும் அக்மார்க் தமிழனின் தன்மாணப் பண்போடு,நீட்டி முழக்கி வாங்கி வண்டிக்காய் காத்திருக்க ,சுண்டக்காயில் சீட் தைத்து எஞ்சின் பூட்டியது போல ஒரு பஸ்.அதன் பேர் பஸ்ஸாம் அவர்களே அங்ஙனம் சொல்லிக்கொண்டார்கள்.
தொலையுங்களடா க்ராதகர்களா, என ஏறி அமர்ந்து பயணம் துவக்கினால்,இருந்த இடத்திலிருந்து பேருந்து நிலையம் விட்டு வெளியே வர இரண்டு மணி நேரம்.அட இதுஎன்னடா அந்த ஏழுமலையானுக்கு வந்த சோதனை, வியக்க இயலவில்லை கோபித்தும் பயனில்லை, படுத்து தூங்கவும் வழியில்லை, உலகை இருட்டா வழியில்லையா என யோசித்தேன்.விழிகள் மூடிக்கொண்டேன்.

அந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் மைக் கட்டி அம்பாசிடர் காரில் வலம் வந்து அறிவிப்பார்கள் ,"தமிழ்நாடு தமிழ்நாடு தங்கத் தமிழ்நாடு, அண்ணா வாங்க அம்மா வாங்க,எத்தனையோ செலவு,அந்த செலவோட ஒரு செலவு. மலைக்கோட்டை மாநகராம் திருச்சி கேஏஎஸ் ராமதாஸ் ஒரு கோடி ரூபாய் சூப்பர் பம்பர் குலுக்கல்".அந்த குலுக்கலை எல்லாம் தடை பண்ணின அரசுக்கு , இந்த குலுக்கலுக்கு ஒரு சடைகூடப் போட வக்கற்ற நிலையை எண்ணி சிரித்தேன்,'குலுங்கிக் குலுங்கித்' தான்,ஆனால் அது என் மனப்பயன் வினையன்று.


விடிகாலை.
என் அருகமர்ந்தவரைக் காணோம்.இறங்கியிருப்பார்.
ஊர் வரப்போகிறது.இறங்க ஆயத்தமானேன்.
காலனி தேடுங்கால் காலில் தட்டியது,மணிபர்ஸ்.
அதில் என் அருகமர்ந்தவரின் அடையாளச்சீட்டுகள்.
கத்தையாகப் பணம்.
நான்கிலக்கத் தொகை!!
தட்.......கடவுள் இருக்கான்டா கொமரு மொமன்ட்...!

விரிச்சோடிய வீதியில் , வரவேற்றன பூட்டிய கேட்டுகள்.
முகம் பார்த்து , எடை பற்றின அன்னையரின் சில பரிகாசத்துக்குப் பின்,
அப்பாடா,இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,போய் கட்டிலில் விழுந்த போது, கட்டில் என்னைப் பார்த்து இவ்வணம் எள்ளியிருக்கலாம்.

விடி,அதி அடைமொழிகளை இழந்த வெறும் காலை வேளை.அந்த நான்கிலக்கத் தொகையை வைத்து நகைக் கடை தொடங்கி,அது நகைக் கடலாகி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்ற ஒற்றுமை கொண்ட அமித்தாப் பச்சனையும், போனால் போகிறதென்று,அவருடைய மருமகளாகிப்போன என் முன்னாள் காதலியையும் அழைத்து திறக்க வைத்து, என்னைக் வேல வெட்டி இல்லாத வெளங்காத வெளக்கெண்ண! என்று விளித்த அந்த பழைய ஹவுஸ் ஓனர் மூஞ்சில கரியப் பூசி, பார்ரா பார்ரா!! என்று கொக்கரித்து ஒரு முப்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.அக்கையர் தொல்லையிடாதிருந்தால், இன்னொரு இருபது வருடங்கள் தாண்டி வாழ்வும் முடிந்திருக்கும்.நிறைவாய் ஒரு சுபம் போட்டிருக்கலாம்.
நான் இவ்வளவு நேரம் தூங்கினாலே அந்த அக்கையாரின் மூக்கி்ல் உஷ்ணம் ஏறிவிடும்.

காலை உண்டிக்கு இலை வேணுமாம்.அதுவும் வாழைஇலை.அதுவும் கிழிசல் வராத  கருப்பண்ண கவுண்டர் தோட்டத்து தலைவாழை இலை தான் வேணுமாம்.அந்தாளு பெண்ணுக்கும் அக்கையாருக்கும் கொஞ்சம் நொரண்டு.அவர் வெடுக்கென்று பேசிவிடுவார், இவர் படக்கென்று சாத்திவிடுவார்,கதவையும் தான்.பள்ளித் தோழிகள் வேற.

வாழைத் தோட்டம்.
வாழைமரம் என்பது நெடு நெடுவென வளர்ந்த ஒரு சாதாரண புல்தான்.
ஒவ்வொரு வாழை மரமும், தனக்கு வேண்டிய உணவை மட்டும் தானாகவே எடுத்துக் கொள்கிறது.அவை வாழ மண்ணையும்,வளர மழையையும் இறைவன் தருகிறான்.அவசியத்தைத் தாண்டி,அவைகளின் தேவை அமைவதில்லை. தேவைகளைத் தாண்டி துளி நீரையும் தொடுவதில்லை.மிக முக்கியமாக இரண்டு தலை சிறந்த பண்புகள்,

#நீங்கள் வெட்டியே சாய்தாலும்,மீண்டும் வளர்ந்து உங்களுக்கே சத்தான வாழைப்பழம் தரும்.
#அடுத்த மரம், பக்கத்து மரம் எதிர்மரம் எதி்லிருந்தும் தன் தேவைகளுக்காக கடுகளவு ஆற்றலையும் எடுப்பதில்லை, பிடுங்குவதில்லை,தொடுவதுகூட இல்லை.

ஆனால் நீ??
கை கொட்டி சிரிப்பது போல ,காற்றில் இலை யாட்டி ஒலி எழுப்பியது.


-அரண்
தேன்மழை


Don't be ego on others.  Try to grow yourself with your own. Don't spend on others for your growth

Saturday, November 15, 2014

அழகே உன்னை ஆராதிக்கிறேன் -Think! Rethink!?!

என் கைகளில் ஒரு பூ.

இருந்தாலும் அவள் அவ்வளவு அழகாக இருந்திருக்கக் கூடாது .யப்பயப்பயப்பா .தாங்க முடியவில்லை .பனி இரவு நேரம் தான் .நடுநசி .லயோலா கல்லூரி அருகில்  நெல்சன் மாணிக்கம் சாலையில் தான் உலாத்திக் கொண்டிருந்தாள்.எத்தனையோப் பெண்கள் இருக்க நான் ஏன் அவளை தேர்ந்தெடுத்தேன் .அழகு .வீட்டிற்கு கூட்டி வந்து விட்டேன் .அடுத்து வேறென்ன .ஆடைகள் கழட்டப் பட்டன .முத்தத்தில் தான் ஆரம்பித்தேன் .உடல்கள் நனைய ஆரம்பித்திருந்தது.இந்த முறை Spooning போரடித்துப் போனதால் Missionary யே ..ம்ம்ம்!!!!!!!வெயிட் வெயிட் .கற்பனையைக் கொஞ்சம் ஸ்லோ ஆக்குங்கள் .இன்னும் சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு தான் .அட அட அடா ...டிவைன் !அவளும் கண்கள் சொருகிப் போய் தான் இருந்தாள் ..அவளே எதிர்பாரா நேரத்தில் குத்தி விட்டேன் .சரக் .அவள் வலி கத்தினாள் .ஆஆ .விடுவேனா மீண்டும் சரக் .அடா அடா அடா .டிவைன் .ட்ரூ டிவைன் இது தான் ..



நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think! 
Rethinkable?

Thoughts can be blocked by emotions like fear, anger, sex and excitement.

 ---------------------------------------------------------------------------------------------------------------------------,


என் கையில் ஒரு ரோஜாப்பூ ரத்தம் சொட்ட!,நிற்கிறேன் .

விடிந்து விட்டது .நான் போக வேண்டும் .அவனைப் பார்க்க வேண்டும் .நாங்கள் Medical Representatives .எல்லா இடங்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம் .உடல்கள் ஒன்று போல் இருந்தாலும் மனம் அப்படி இல்லை.இரட்டையராய் பிறந்ததில் நான் வருத்தப்படும் தருணம் அவை.He is obsessed .பைத்தியமாக திரிய ஆரம்பித்தான் எதில் தெரியுமா ?அழகு .

Wait!

நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think!! 
Rethinkable!! 


Thoughts can also be fixed, brought up,stimulated by emotions.

----------------------------------------------------------------------------------------------------------------------------,



சமாதியில் அந்த பூவை வைத்து விட்டேன் ,கிளம்புகிறேன்.

அவனை என்ன சொல்லி அழைத்தும் வரவில்லை .பிடிவாதக்காரன்.ஆனால் நாளாக நாளாக அவன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே போனது.ஆனாலும் அவன் திருந்துவதாயில்லை.அவனே ஏதேதோ மருந்து போட்டு அப்பப்போ சரியாக்கிக் கொள்வான்.பார்க்கவே ரொம்ப மெலிந்து விட்டான்.பாவமாக இருந்தது.அழைத்துப் பார்த்தேன் .அப்போதும் கூட என்னோடு வர மறுத்து விட்டான் .எப்படி வருவான் போதையல்லவா?.சண்டையிட்டு விட்டுதான் என்னால் வர முடிந்தது . அன்றிலிருந்து நான்கு மாத்ததில் செத்தே போய் விட்டான் .இறப்புச் சான்றிதழில் Consequential cause of death :AIDS,என்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ,'இதற்கெல்லாம் மூல காரணம் எது-அழகு'.சும்மா எப்படி இருக்க ?


நான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தேனா???


Think!!! 
Rethinkable???? 

Thoughts can be blocked also by confusion.




 x--------------------------------------------------------------------------------------------------------- x

Wednesday, November 12, 2014

"ஐப்பசி-அய்யோப்பசி!"

10.11.2014
8.45am:

சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!

துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .

..இவை  எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?

10.11.2014
3.10pm:

கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!

வாயிலிருந்து!!!!

வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?

11.11.2014
12.50pm:

அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?

நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!

11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?

மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!

அய்யோ....................!!!!!

11.11.2014
1.24pm:

"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .

அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .

21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.

10.11.2014
9.50am:

"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!

அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!

ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .

நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...

கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!

ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!

த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.

பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...

பஸ் நம்பரா???21L

10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!

போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!

அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.







13.11.2014

மழை வடிந்திருந்தது!.

"அந்த !!"குழியிலும் தான்.

தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!

தேன்மழை