Sunday, December 14, 2014

கழுவச் சேர்வை -புது கட்சி-மது-முத்தப் ????-வறட்சி!

பெரியார் அண்ணா காலம் , அதற்கு முன்பாக கூட இருக்கலாம் . மக்கள் பணி , பொது சேவை என்று எப்பிள்ளையாவது கிளம்பினால், அவ்வளவு தான் சீவக்கட்டையை தூக்கிக் கொண்டு வந்து விடுவார் அன்னையார்.

Thursday, December 4, 2014

மரணம்

உடல் உண்மையிலேயே வியப்பான. பல செயல்பாடுகளின் கூட்டமைப்பு .எண்ணற்ற செல்கூட்டங்கள்.அவையெல்லாம் நீடுதுயில் நீட்டிப்போனால்,என்ன ஆகும் ???ரணங்களில்லாம் மாபெரும் ரணமல்லவா?,-மரணம் ! 

அதிலும் பிண்டம் இரவு வீட்டில் இருக்குமானால், துக்கம் தொண்டையை அடைக்கும் அச்சமயம் தூக்கம் கண்களை அழுத்தும் அல்லவா ?

நிம்மதியான உறக்கத்துக்கு குறட்டை ஒலி கிடையாது .உண்மையில் உறங்குபவன் அந்த  ஒருவன் தான் .

Wednesday, November 26, 2014

கழுவச் சேர்வை -இசை-சிபிலிஸ்-மனம்-facebook!

இந்த சமுதாயத்துக்காக நம் அடையாளங்கள் பல மாறியுள்ளது .உண்ணும் உணவாகட்டும் ,உடுத்தும் உடையாகட்டும்,ஏன் போகும் கழிவறையாகட்டும்.உங்களை, என்னை இந்த சமுதாயம் பல இடங்களில் செதுக்கியுள்ளது.தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் நான் எனும் பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஆனால் பாருங்க,அந்த நான் தன்மை செயற்கையானது.எப்போதும் மனம் இயற்கையைத் தானே நாடும்!!!

அல்லவா?
T எனும் சுயம் அழியும்  போது,அது வரை ஒளிந்திருந்த உண்மையான நாம் வெளிவரும் ,சமூக முக மூடி அழிந்து .இதைத் தான் காமம்,காதல்,புகை ,மது இன்ன பிற போதை வஸ்துக்களும் தருகிறது .மனமும் அதையே நாடுகிறது .விளைவு -மனிதன் அடிமை.ஆனால் நண்பர்களே!
இசையும் இந்த வரிசையில் தான் உள்ளது .அதைக் கூட உபயோகிக்கலாம் ,மனமும் உடலும் அடிமையாகாமல் சுதந்திரமாகவே !
**********----------------------

Annular Secondary Syphilis.பால் வினை நோய்.
பொதுவாக சிபிலிசு என்றால் பிறப்புறுப்பில்தான் புண் வரும் என்பார்கள் .இது அதில் வேறுபட்டது.
செந்தடிப்புகள் தோலில் எப்படி இருக்கிறது பாருங்கள் .
ஆனால் நான் சொல்ல வந்தது இந்த வேற்றுமையல்ல!
சிபிலிசே நம் நாட்டுக்கு வேற்றுமையானது .
It was a time of world exploration and Europeans took the disease to Calcutta in 1498,பிறகு தான் நம்மூரில் எல்லாம் படம் காட்ட ஆரம்பித்தது அந்த சிபிலிஸ் .
இதை நம்மூரில் எப்படி அழைத்தார்கள் தெரியுமா ,?
நம் ஊர் கிடக்கிறது , சிபிலிஸ் பிறப்பெடுத்த ஐரோப்பாவில் என்னவெல்லாம் சொல்லி அழைத்தார்கள் தெரியுமா ?
The French called it the ‘Neapolitan disease’, the ‘disease of Naples’  or the ‘Spanish disease’, and later grande verole or grosse verole, the ‘ great pox’, the English and Italians called it the ‘French disease’, the ‘Gallic disease’, the ‘morbus Gallicus’, or the ‘French pox’, the Germans called it the ‘French evil’, the Scottish called it the ‘grandgore‘, the Russians called it the ‘Polish disease’, the Polish and the Persians called it the ‘Turkish disease’, the Turkish called it the ‘Christian disease’, the Tahitians called it the ‘British disease’,
in India it was called the ‘Portuguese disease’,
in Japan it was called the ‘Chinese pox’, and there are some references to it being called the ‘Persian fire’
இதில் கவனித்துப் பாருங்கள் ,
ஒவ்வொரு நாட்டுக்காரனும் பகை நாட்டின் பேரை சிபிலிஸுக்கு வைத்திருக்கிறான்கள் .(றார்கள் )
பாத ரசத்தைத் தடவியும் மாத்திரையாகத் சாப்பிட்டும் இரண்டு நூற்றாண்டுகள் (16முதல் 18வரை)விழுங்கியிருந்திருக்கிறார்கள்.
பிறகு ஆர்சணிக் ,அப்புறம் தான் பென்சிலின் வந்து தீர்வு கட்டி யிருக்கிறது .
பாதரச வைத்தியம் நடப்பில் இருந்த போது ,அதன் வைத்திய முறையை இப்படிக் குறிப்பார்கள்.
“A night with Venus, and a lifetime with mercury”
இதில் விசேசம் ,
ஆர்சணிக் கண்டு பிடித்த எர்லிச்க்கும் பெனிசிலின் கண்டுபிடித்த பிளமிங் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
அப்படி யானால் பாதரசம் கண்டு சொன்னவனை ஏன் மறந்தார்கள் என்றால்
Neuropathies, kidney failure, severe mouth ulcers and loss of teeth, and many patients died of mercurial poisoning rather than from the disease itself.
இது மாதிரியான பக்க விளைவுகளாலா?என்றால் ,
நிச்சயமாக இல்லை .
அதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது .
பாத ரசம் பயன்படுத்தப்பட்ட 16ஆம் நூற்றாண்டில் நோபல் பரிசு என்பதே இல்லை .
அப்படியே இருந்திருந்தாலும் மேற்சொன்ன பக்க விளைவுகளால் மறுக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளது .
பாதுகாப்பாக, பத்திரமாக , ஒரே அடியில் சிபிலிஸை வீழ்த்தி ,இனி வேறு எந்த மருந்துகளும் தேவையில்லை என்ற நிலையை பெனிசிலின் உருவாக்கி விட்டது .
அதனால் சிபிலிஸின் ஆட்டம் கட்டுக்குள் கொணர்ந்து கக்கத்தில் சுருட்டியாகிவிட்டது.
இதைப் போல  எய்ட்ஸ்க்கு நிகழ இன்னும் இரண்டு நூற்றாண்டு காக்க வேண்டுமா என்றால் ?
நிச்சயமாக இல்லை !
தற்கால ஆய்வுகளில் தெரிவது ,
அதை விட அதிகமாகத் தான் காக்க வேண்டும் .
ஆதலால் காக்க வேண்டியவைகளைக் காத்துக் கொள்ளுங்கள் , காக்கைகளும் காத்துக் கொண்டு தான் இருக்கிறது ,கவ்விக் கொண்டு போக!!!
***********----------------------
புகைப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் .
சினிமாவே பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பவன் கூட இந்த வாசகத்தை எங்கேனும் , ஏன் அந்த சிகரெட் டப்பாவிலேயே கூட கண்டிருக்க முடியும் .
உலகில் அதிகம் பேரை அடித்துத் தின்னும் புற்று எது என்று கேட்டால் அது பஞ்சு போன்று மென்மையான நுரையீரலின் புற்று தான் .
ஆனால் அது மருந்து மாத்திரைகளில் அடங்கிவிடுவதில்லை .
தொழில் நுட்பம் தூங்கியிருந்த காலத்தில் வேண்டுமானால் சரி , இப்போதும் 'கட்டி யிருந்தால் வெட்டிப் போடு 'என்ற நிலை எப்படி சரியானதாகும்.
Crizotinib
இந்த மருந்து சமீபத்திய வரவு.ROS1 proto-oncogene receptor tyrosine kinase (ROS1) வேலையைத் தடுப்பானிது.நுரையீரலில் வரும் பெரும்பான்மைப் புற்றான non–small-cell lung cancers (NSCLCs)களை குணமாக்க வல்லது.
***********---------------------

கமகமக்கும் கட்டிலில்
அணைந்தது காமத்தீ
-முதலிரவு !
**********----------------------
நாயில்லாத வீடுகளில் கயிறோ கல்லோ தேவையில்லை.எண்ணிப் பாருங்கள் ,நீங்கள் நாயோ பூனையோ எலியோ வீடுகளில் வளர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.எதுவும் செய்யாது சும்மா விட்டுப் பாருங்கள்.வெறுமனே அவுத்து விட்ட கண்ணுக்குட்டியாட்டம் தான் ஆட்டம் போடும் .அதை அடக்க நீவிர் ஏது செய்வீர் ?,
சங்கிலியோ கயிறோ வசதிக்கு ஏற்றாற்போல கட்டிப் போட்டு கம்முனு கடக்கச் சொல்லிவிடுவீர்கள் !
அல்லவா?
அந்த நாயும் பொட்டாம் பொதிகாளையாட்டம் கொடுத்த பணிமுடித்துப் பண்ணாட்டுப் பண்ணாமல் போய் படுத்துக் கொள்ளும் .
இளநெஞ்சே ,
எண்ணிப்பார் !
மனமே இல்லாதவனுக்குக் கோயில் என்ன? கடவுள் என்ன ?
அல்லது காரித் துப்பும் (80களில் அக்காலப் பாட்டிகள் புளுச் புளுச் என ஒரு டப்பாவில் துப்புவார்களே ,அந்த டப்பாவின் பேர் தெரியவில்லை ,ஆனால் அது தான் நான் இங்கு கூற வருவது )டப்பாவோ
தான் என்ன ?
எல்லாம் ஒன்னு தான் வெறும் மண்ணு தான் .
இருந்தும் பயண் தரா!!!!!!!
***********----------------------
நிறக்குருடுகள் .
நம்மூர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பவை .
மேலை நாடெகளில் சகஜம் .
அதிலும் இந்த சிகப்பு பச்சை கலவை நிறக்குருடு பாவத்திலும் படு பாவம் .
sex chromosome பிறழ்வுகளால் தொற்றும் இந்நோய் பெண்களைத் தொடுவதில்லை.
ஆணுக்கு ஒருxஒருy
பொண்ணுக்கோ இரண்டும் x
அதில் ஒன்று பிழையானால் என்ன ?
சமீபத்தில் கூட Whatsapp இல் நீள வண்ணம் ஒளிர்வால் பிரச்சனைகள் பல உருவாகிறது என கூக்குரல்கள் பல எழுந்ததே !
சொல்ல மறந்து விட்டேன் ,பாவப்பட்ட அந்த சிவப்பு பச்சை நிறக்குருடுகளுக்கு ஒரு தீர்வும் இருக்கிறது .
"பார்ப்பதை எல்லாம் நீளமாக்குக!!"

-தேன் !
(இதை நான் எழுதி முடித்துத் தலைப்பிடுகையில் கொக்குவிரட்டி ஙே என முழித்தான்.ஒன்னியும் புர்லையே என்றான் .அட விரட்டிப் பயலே கடலில் இருந்து எடுக்கும் முத்துகள் சுத்தமாகவா இருக்கும் என கேட்டேன் .கலீஜா தான் இருக்குமென்றான் .பிறகெப்படி சுத்தமாக பளிச்செனக் கோவையாக்கி முத்து மாலையாக கழுத்தில் அணிய முடிகிறது என்றேன் .அது ,சுத்தமாக க் கழுவி ஒன்னு ஒன்னாச் சேர்த்து மாலை யாக்கிக்கலாம் என்றான் .என்ன செய்வாய் கழுவி சேர்ப்பாயா?
இப்போது தலைப்பைப் பார் ! என்றதற்கு ,
கொக்கு விரட்டியின் தலையில் பல்ப் எரிந்தது !)

கழுவச் சேர்வை = Random thoughts

Sunday, November 16, 2014

குரங்கு மனுசா!-@Random Thoughts

இது நடந்தது சுமாராக 4லட்சம் வருடங்களுக்கு முன்
.மனிதனுக்கும் குரங்குக்கும் நிகழ்ந்த கருத்து வேற்றுமைகளில் முதன்மையானது ,"முடியும் ,முடியாது"!.முடியாதென்றவர்கள் இன்றும் வயிற்றுப் பிழைப்புக்கு 'அடுரா ராமா 'தான் போட்டுக் கொண்டுள்ளார்கள் சாலையில் .ஏனையோர் வேலையில் ,ஓலையில் !
சங்க காலத்தில் பேப்பர் இருந்ததா என்ன ..?(ஓலை =பேப்பர் )
 ----------------------------------------------------------------------------------------------------------

மூங்கிலென்ன முகிலென்ன?
ரோஜாவின் இதழன்ன!
மெல்லிதழ் கள்வ!நின்!
பன்னீரின் இதந்தன்னில் !
குத்திய முள் மறந்தேன் .
-மீசை !

=================================================================

மூடி வைத்தல்-

எங்காவது சாப்பாட்டை மூடி வைத்து சாப்பிட்டுப் பார்த்ததுண்டா?
இல்லை,
எங்காவது அழுகிய ஊசிப்போனப் பண்டத்தை மூடாமல் வைத்துப்பார்த்ததுண்டா?
இரண்டும் பட்சணங்கள் தானே!
ஆனால்,
அதே உணவை இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது மூடித்தானே எடுத்துப் போகிறோம் .மூடாமல் போனால் பிறகு அது காக்காய் கழுகுகளுக்குத்தான் இரையாகும் .
அப்படி ஒரு பண்டம் பெண் உரு எனக் கொள்க!
மகளிர் தமக்கைகளே,தயவுசெய்து மூடிக்கொள்ளுங்கள், காக்காய் கழுகுகள் பல ஊளையிட்டே உலவுகின்றன ,கவ்விட்டுப் போனபிற்பாடு கூப்பாடு போட்டாலும் போச்சே போச்சே வட போச்சே  தான் .

###########################################################################

ஈன்று புறந்தருதல் எல்லா தாய்மார்கள் கடமை .அந்த மகன் உலக மக்கள் ,தன் சமுதாய மக்கள் மெச்சும் படி தீங்கிழைக்காத நல்வழி நடக்கும் மனிதனாக்கி அறிவடைத்துக்காக்க கடவது தந்தை .அது அவரின் பிறவிக் கடன் .அதாவது நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ ஆவாயே ஆனால் இச்செயல்கள் தானாகவே இயங்கிக்கொள்ளும்.
ஒரு கேள்வி தோன்றுகிறது .அப்படியானால் ஒரு இளைஞன் இளைஞியின் பிறவிக் கடன் யாது ?.அம்மகவைப் பெறல் .
அதற்கு
ஈர்த்தல் ஈர்க்கப்படுதல் இளமையின் பெறும் பொறுப்புஅல்லது கடன்கள் ஆகின்றன .முடிவில் இயற்கை என்னிடமோ உன்னிடமோ யாரிடமும் வேண்டுவது வாழ்வு சங்கிலியின் சுழல் தொடர்ச்சி.

---------------------------------------------------------------------------------------------------------------------

அதுக்கு நீ சரிப்பட மாட்ட !!

உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்குவது என்பது உணர ஆரம்பிக்கிறது.கட்டியவளாயினும் கண்டவளாயினும் காவ காகாவும் ஒன்று தான் ..சொரணையற்ற சடங்கள்.ச்சை இதை விரும்பினோம் ?அருவருப்பாக உள்ளது .ஒரு ஆண் குடிகாரன் ஆவதற்கு ஒரு பெண்ணே போதுமான காரணமாயிருக்கிறாள்.ஆணுக்கோ- போதை அவசியத்திலும் அத்யாவசியமாகிறது.இந்த இழவெடுத்த பிறப்பெடுத்த காரணமோ பல சமயம் உணர்வுகளில் மங்கிவிடுகிறது.சமூகம் பெண்ணை வைத்து காசு பார்த்து கொழுக்க ,அதுவே ஆணின் ஏமற்றத்துக்கு அடிதளமாகிறது.குரங்கு மனதுக்கு சொல் புத்தி கிடையாது ,சுயபுத்தி மட்டும்தான் .சொன்னாப்புரியாது?பித்து பிடித்து தான் போகிறது .அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமானால் டோப்பமைன் ,டெஸ்டோஸ்டிரோன் குவியல் கூடுதல் நிறைதல் நிரப்புதல் .உண்மையான ஆண் பித்தனாகவே வாழ்கிறான் .ஆண்ட இறைவனுக்கும் இது பொருந்தும் .ஆதாம் காலங்களில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் திரிந்த ஒரு மிருகத்தை வெளிச்சம் இல்லாத சத்தம் கேட்காத அறைக்குள் பூட்டிவிட்டோம்.கடமை கண்ணிய கட்டுப்பாடுகளின்  உணர்வலைகள் கதவாக இவ்விலங்கு  சிலிர்த்த போதும் திடமாக இத்தனை காலமும் காத்து விட்டது .ஆனால். இனி?

உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தி வாழும் இக்காலத்தில் .?அக்கதவுடைந்து மீண்டும் ஆதாம் காலம் துளிர்க்கிறதோ என ஐயமாக உள்ளது.

=======================================================================

வலி -

மனித இருத்தல் இயக்கம் இவற்றின் குறியீடு .
சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சும் வலி நஞ்சாகி விடும் .

நாலைந்து வேதிகள் சேர்ந்து மனதில் எழும் வலி இருக்கிறதே!ம்ம்ம்..இதுதான் மனம் எனத்தெரியத்தொடங்கும் நாளிலிருந்து பிடிக்கும் சனியது.

பூங்காகள் சென்றிருப்போம் தோட்டக்காரர் தலையை க்ராப் வெட்டுவது போல செடிகளை வெட்டுவதைப்பார்த்திருப்பீர்கள் ,அது மாதிரி களை யான எண்ணங்களையும் வெட்டியெறிய நல்ல சமுதாயம் நிச்சயம் வேண்டும் .

நல்ல சமுதாயம் என்பது அறிவார்ந்த பெற்றோர் ,கற்ற நண்பர் ,குற்றமில் சுற்றம் என பல குவியல்களின் முகமது .இதில் எங்கு பிளவென்றாலும் ,தொல்லை தனி மனிதனுக்கு மட்டுமல்ல என்பதை இவ்வூர ர் இம்மையில் உணர்வதற்கு குற்றாலீசுவர முயற்சி செய்தாலும் முடியாது .

மனம் பத்திரம் அங்கு தான் உங்களை ஆளும் கடவுள் எண்ணங்களாய் வசிக்கிறார் .

ஆளும் என்ற வார்த்தையை உபயோகித்தேன் ,அதன் பொருள் எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ எதையும் செய்ய வைக்க வல்ல ஆணை பிறப்பிக்கும் அரசு போன்றது .அதனால் அங்கு நல்லவற்றையே காட்டுங்கள் ,தீயவை தீய பயத்தலால் !

-தேன்

~~

Saturday, November 15, 2014

அழகே உன்னை ஆராதிக்கிறேன் -Think! Rethink!?!

என் கைகளில் ஒரு பூ.

இருந்தாலும் அவள் அவ்வளவு அழகாக இருந்திருக்கக் கூடாது .யப்பயப்பயப்பா .தாங்க முடியவில்லை .பனி இரவு நேரம் தான் .நடுநசி .லயோலா கல்லூரி அருகில்  நெல்சன் மாணிக்கம் சாலையில் தான் உலாத்திக் கொண்டிருந்தாள்.எத்தனையோப் பெண்கள் இருக்க நான் ஏன் அவளை தேர்ந்தெடுத்தேன் .அழகு .வீட்டிற்கு கூட்டி வந்து விட்டேன் .அடுத்து வேறென்ன .ஆடைகள் கழட்டப் பட்டன .முத்தத்தில் தான் ஆரம்பித்தேன் .உடல்கள் நனைய ஆரம்பித்திருந்தது.இந்த முறை Spooning போரடித்துப் போனதால் Missionary யே ..ம்ம்ம்!!!!!!!வெயிட் வெயிட் .கற்பனையைக் கொஞ்சம் ஸ்லோ ஆக்குங்கள் .இன்னும் சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு தான் .அட அட அடா ...டிவைன் !அவளும் கண்கள் சொருகிப் போய் தான் இருந்தாள் ..அவளே எதிர்பாரா நேரத்தில் குத்தி விட்டேன் .சரக் .அவள் வலி கத்தினாள் .ஆஆ .விடுவேனா மீண்டும் சரக் .அடா அடா அடா .டிவைன் .ட்ரூ டிவைன் இது தான் ..



நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think! 
Rethinkable?

Thoughts can be blocked by emotions like fear, anger, sex and excitement.

 ---------------------------------------------------------------------------------------------------------------------------,


என் கையில் ஒரு ரோஜாப்பூ ரத்தம் சொட்ட!,நிற்கிறேன் .

விடிந்து விட்டது .நான் போக வேண்டும் .அவனைப் பார்க்க வேண்டும் .நாங்கள் Medical Representatives .எல்லா இடங்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம் .உடல்கள் ஒன்று போல் இருந்தாலும் மனம் அப்படி இல்லை.இரட்டையராய் பிறந்ததில் நான் வருத்தப்படும் தருணம் அவை.He is obsessed .பைத்தியமாக திரிய ஆரம்பித்தான் எதில் தெரியுமா ?அழகு .

Wait!

நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think!! 
Rethinkable!! 


Thoughts can also be fixed, brought up,stimulated by emotions.

----------------------------------------------------------------------------------------------------------------------------,



சமாதியில் அந்த பூவை வைத்து விட்டேன் ,கிளம்புகிறேன்.

அவனை என்ன சொல்லி அழைத்தும் வரவில்லை .பிடிவாதக்காரன்.ஆனால் நாளாக நாளாக அவன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே போனது.ஆனாலும் அவன் திருந்துவதாயில்லை.அவனே ஏதேதோ மருந்து போட்டு அப்பப்போ சரியாக்கிக் கொள்வான்.பார்க்கவே ரொம்ப மெலிந்து விட்டான்.பாவமாக இருந்தது.அழைத்துப் பார்த்தேன் .அப்போதும் கூட என்னோடு வர மறுத்து விட்டான் .எப்படி வருவான் போதையல்லவா?.சண்டையிட்டு விட்டுதான் என்னால் வர முடிந்தது . அன்றிலிருந்து நான்கு மாத்ததில் செத்தே போய் விட்டான் .இறப்புச் சான்றிதழில் Consequential cause of death :AIDS,என்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ,'இதற்கெல்லாம் மூல காரணம் எது-அழகு'.சும்மா எப்படி இருக்க ?


நான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தேனா???


Think!!! 
Rethinkable???? 

Thoughts can be blocked also by confusion.




 x--------------------------------------------------------------------------------------------------------- x

Friday, November 14, 2014

குஜிலி குண்டிலினிப் பவுடர் !

முன்பெல்லாம் பொசுக்கு பொசுக்கென்று படபடப்பாகி வெடித்து கதறி விடுவான் .அப்போதெல்லாம் அவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை .

இப்போது சுருக்கம் வேறு வந்து விட்டது .இனிமேலும் இப்படியே விட்டால் மவுசு போய் விடும் என்றதனால் ஒரு டம்ளர் குடித்து விட்டு இஸ்த்த லக்கடி லாலா சுந்தரி கோல கொப்புர கொய்யா ,என்று சொல்லி விட்டு அணைத்தான் விளக்கையும் .இரவும் முடிந்தது .காலை .
அப்பாடா என்று தடவிப்பார்த்தான் டவுசர் .கடுப்பாகிவிட்டான்.சுருக்கமும் போகல ஒரு கரும்மும் போகல.

உடனே போன்பண்ணி விட்டான்.டே கோந்து மவனே!என ஆரம்பித்து அர்சனையைத் தொடர்ந்தான் .

புத்தியக் காட்டிட்டலடா என்று போனைத் துண்டித்தான் அந்த மவன்.

பள்ளி நாட்களில் இருந்தே இப்படித்தான் ஆனா ஊனா எந்திரிச்சிடுவான்,டவுட் சார் என்று .அதுவே காலப்போக்கில் மறுவி டவுசர் ஆகி விட்டது .அந்த சர் விகுதி பிடித்துப் போனதால் அவனும் அதைப் பெரிதாய் கண்டு கொள்ள வில்லை.

சின்ன வயசில்லெல்லாம் தண்ணியிலேயே ஊறிக்கிடப்பான்.காய்ந்தே போனாலும் தண்ணியிலிருந்து வரமாட்டான் .காய் பற்றியெல்லாம் அப்பொழுது கவலை இல்லை .

முந்தா நாள் அமைதி யாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடுதிப்பென்று விழுந்து விட்டான் .எழவே முடியவில்லை .என்ன எழவுடா என பார்த்தான் டவுசர் .எங்கும் சுருங்கி இருந்தது.

என்னடா இது வம்பு என்று, கோந்து சாமி -அவன் நண்பனிடம் சொன்ன போது தான் அந்த சாமியாரைப் பற்றி சொன்னான் .

அந்த சாமியார்தான் குஜிலி குண்டிலினி பவுடரைக் கொடுத்து அந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்.சொன்னது மாதிரியே டவுசரும் பவுசாக இரவு டம்ளர் தேனில் கலந்து குடித்து விட்டு மந்திரத்தைச் சொல்லிவிட்டு படுத்தான் .

ஒரு சோதனைக்காக கட்டிலில் இருந்து விழுந்து பார்த்தான்.எழவே முடியவில்லை .அதற்கு டவுசரின் பொண்டாட்டி சொன்னாள் "குண்டிலீனியராச்சு இப்ப குஜிலி கேக்குதா?"

Thursday, November 13, 2014

முட்டாளே மேல்!


Lucy-படம் பார்த்திருக்கிறீர்களா?
மனிதன் 100% மூளையை உபயோகித்தால் என்னவாகும் என்று காட்டியிருப்பார்கள்.முக்காலமும் உணரலாம் ,கடவுள் நிலை கூட சாத்தியம் என்பார்கள் .
100%கூட வேண்டாம் ,IQ-140தாண்டினால் நிகழும் விபரீதங்கள் தான் மேலே உள்ள படம் .
அமைதியின்றி,அடிமையாகி ச்சே,இதுக்கு முட்டாளாகவே இருந்திடலாம் போலயே !
பல சமயங்களில் வரம் எது தெரியுமா ?
அறியாமை தான் .
அறிய வேண்டாதவைகள் ,ஏன் தீயப் பழக்கங்களையே எடுத்துக் கொள்வோம் ,எதற்கு இவற்றைத் புரிந்திட முனைய வேண்டும் .இவை எல்லாம் புரிந்து முடிபவை தானா?
அறிய அறிய அடங்காத அரிப்பல்லவா அவை .!
கண் முன் தெரியாமல் கண்டதையும் போட்டு உழட்டிக்கொள்ளவேண்டாம்.மனம் ..........very fragile ...

Wednesday, November 12, 2014

"ஐப்பசி-அய்யோப்பசி!"

10.11.2014
8.45am:

சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!

துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .

..இவை  எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?

10.11.2014
3.10pm:

கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!

வாயிலிருந்து!!!!

வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?

11.11.2014
12.50pm:

அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?

நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!

11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?

மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!

அய்யோ....................!!!!!

11.11.2014
1.24pm:

"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .

அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .

21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.

10.11.2014
9.50am:

"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!

அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!

ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .

நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...

கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!

ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!

த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.

பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...

பஸ் நம்பரா???21L

10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!

போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!

அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.







13.11.2014

மழை வடிந்திருந்தது!.

"அந்த !!"குழியிலும் தான்.

தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!

தேன்மழை

Monday, November 10, 2014

முத்தப் போராட்டம்

இளநெஞ்சே வா!
சமீபத்திய முத்தப் போராட்டம் பற்றி ஏதாவது எல்லாருக்கும் தெரிந்துஇருக்கும் .கேரளாவில் நடந்ததல்லவா?

அட விரட்டிப் பயலே உனக்கு அதில்லென்ன என்கிறான் பச்சிலைப் புடுங்கி.அவனுக்கு பரிதி சாமி சொன்னது தெரியாது .முத்தம் .எப்படி கொடுக்கறானுவ பார்த்தீர்களா .அன்பு பாசம் என்றால் ஏன்டா வாயில் போய் கொடுக்கிறீர்கள் என்று கேட்டானா அந்த பச்சிலைப் புடுங்கி .கணவன் மனைவிக்குள் என்றால் கூட பரவாயில்லை .அன்பர்களாம் காதலர்களாம் .

சரிதான் .இப்போது முதல் படத்தைப் பாருங்கள் .அது ஹெர்பெஸ் நோய் .உமிழ் நீரால் பரவுவது.முத்தத்தால் பரவுவதென்றும் சொல்லலாம் .இன்னொன்றும் இருக்கிறது .எப்ஸ்டீன் பார் வைரஸ் .இவை இரண்டும் அதிக பட்சமாக மூளைக் காய்ச்சல் இரத்தப் புற்றுநோய் அவ்வளவு தான் உண்டாக்கும் .அதனால் என்ன என்று எண்ணும் எந்நெஞ்சங்களும் அறிக அப்படி முத்தப் போராட்டத்தில் இவை point source epidemic ஆக உருவாகி ஏதுமறியப் பச்சிளங் குழந்தையைக் கூடப் போய் சேரும் .ஒரு nuclear fission போல .இந்த இரு வைரஸ்களும் எயிட்ஸ் போல ஒரு முறை வந்தால் அழிக்கக் கூட முடியாது.புற்றுநோய் அளவுக்கு இல்லாவிட்டாலும் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒன்று வாழ்க்கைத் தரம் .இளமையின் ஆற்றல் .சக்தி .வலிமை .அனைத்தையும் உறிஞ்சி சோம்பேறியாக்கி மூலையில் முடக்கி விடும் .இதற்குத் தானே ஆசைப்படுகிறீர்கள் பாலகுமாரர்களா?.
Enjoy .

All You have created is not history ,but A Point Source epidemic .
இச்சைகளைக் கொண்டு இம்சிக்கவும் வேண்டாம் .இம்மியளவும்வாழ்வில்  நசுங்க வேண்டாம் .

சமீபத்தில் கூட Roger Federar டென்னிஸ் ஆட்டத்தில் தோற்ற போது மோனோ நியுக்கிலியஸ் Mononucleosis தொற்றால் என்ற பேச்சு வந்தது நினைவிருக்கிறதா?

பொது வெளியில் சாக்கலேட் சாப்டுற மாதிரி "இச்"யிடும் மேலை நாட்டை உதாரணமாக எடுத்தீர்கள் என்றால் .அவன் எப்போதும் லேசான சரக்கு போதையிலேயே இருப்பான் அல்லது இருப்பாள் .நீங்களோ நானோ அப்படியா?

இச்சை போல் இருந்து வாழ ஈப்புழு எறும்பு கோரும் உச்சமாம் மனித ஜென்மம் இச்செயலை மறந்து வாழ்ந்து தொலைப்போமாக!

கொக்கு விரட்டி


தேன்மழை