Friday, November 14, 2014

குஜிலி குண்டிலினிப் பவுடர் !

முன்பெல்லாம் பொசுக்கு பொசுக்கென்று படபடப்பாகி வெடித்து கதறி விடுவான் .அப்போதெல்லாம் அவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை .

இப்போது சுருக்கம் வேறு வந்து விட்டது .இனிமேலும் இப்படியே விட்டால் மவுசு போய் விடும் என்றதனால் ஒரு டம்ளர் குடித்து விட்டு இஸ்த்த லக்கடி லாலா சுந்தரி கோல கொப்புர கொய்யா ,என்று சொல்லி விட்டு அணைத்தான் விளக்கையும் .இரவும் முடிந்தது .காலை .
அப்பாடா என்று தடவிப்பார்த்தான் டவுசர் .கடுப்பாகிவிட்டான்.சுருக்கமும் போகல ஒரு கரும்மும் போகல.

உடனே போன்பண்ணி விட்டான்.டே கோந்து மவனே!என ஆரம்பித்து அர்சனையைத் தொடர்ந்தான் .

புத்தியக் காட்டிட்டலடா என்று போனைத் துண்டித்தான் அந்த மவன்.

பள்ளி நாட்களில் இருந்தே இப்படித்தான் ஆனா ஊனா எந்திரிச்சிடுவான்,டவுட் சார் என்று .அதுவே காலப்போக்கில் மறுவி டவுசர் ஆகி விட்டது .அந்த சர் விகுதி பிடித்துப் போனதால் அவனும் அதைப் பெரிதாய் கண்டு கொள்ள வில்லை.

சின்ன வயசில்லெல்லாம் தண்ணியிலேயே ஊறிக்கிடப்பான்.காய்ந்தே போனாலும் தண்ணியிலிருந்து வரமாட்டான் .காய் பற்றியெல்லாம் அப்பொழுது கவலை இல்லை .

முந்தா நாள் அமைதி யாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடுதிப்பென்று விழுந்து விட்டான் .எழவே முடியவில்லை .என்ன எழவுடா என பார்த்தான் டவுசர் .எங்கும் சுருங்கி இருந்தது.

என்னடா இது வம்பு என்று, கோந்து சாமி -அவன் நண்பனிடம் சொன்ன போது தான் அந்த சாமியாரைப் பற்றி சொன்னான் .

அந்த சாமியார்தான் குஜிலி குண்டிலினி பவுடரைக் கொடுத்து அந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்.சொன்னது மாதிரியே டவுசரும் பவுசாக இரவு டம்ளர் தேனில் கலந்து குடித்து விட்டு மந்திரத்தைச் சொல்லிவிட்டு படுத்தான் .

ஒரு சோதனைக்காக கட்டிலில் இருந்து விழுந்து பார்த்தான்.எழவே முடியவில்லை .அதற்கு டவுசரின் பொண்டாட்டி சொன்னாள் "குண்டிலீனியராச்சு இப்ப குஜிலி கேக்குதா?"

0 comments:

Post a Comment