Monday, October 20, 2014

இடமில்லை வெளியே போ!

மாரி வருவன் ,
இருநாள் அமர்வன் ,
இடம் நீ அளிக்க
"எம் முன்னோர் சாற்றிய கூற்றும் பொய்யோ!"

அளிக்க ~அழிக்க ஆனது ,காலப்பிழையோ !
இருக்கும் இடம் திரிந்து அனைத்தும் அபகரிக்க ,உறையுள் இழந்து திரியும் நிலை காண்கிறேன் .இது யாவர் குற்றம் ?குன்றும் மாள குந்தித் தின்னும் குறுமதியாளர் குற்றமா?அரசியல் பிழைத்தும் அறம் கூற்றாகியும் அடிசில் தடவி அகம்புறந்த ஆள்வோர் குற்றமா?மண்ணோ மக்கும் மன்பதையும் மக்கும் கூட்டத்தில் மதனவிதனத்தில் களிக்கும் என் போன்ற மதோன்மத்தர்கள் குற்றமா?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
குற்றம் பார்க்காவிடில் பிறகு சுற்றுப்புறமும் இல்லை .

ஆண்ட அவ லட்சணம் ஆழி மழைக் காட்டியும் அனுசரித்து அகழ்வது நிச்சயம் என் குற்றமே -என் செய??? கடவது கடவதுவே, என்றிலாது,கடவுள் தனம் காணும் நாள் எந்நாள் ?

அந்நாளே யாவருக்கும் தீப ஆவளி திருநாள் .அது வரை ???வெடித்துக் குமுறுங்காள் எம்மாக்களே!


தேன்மழை

0 comments:

Post a Comment