Sunday, February 12, 2012

ஒரு நல்ல செயல்!

கொடுத்து வாழும் பண்பை ஈகை என்பர்.
இன்றைய அரசுகள் கொடுக்கும் இலவசங்கள் போல் அல்ல-அவை சோம்பலை வளர்ப்பவை.

நெடுங்கதவு உன்கதவு;தேடிவரும் வறியவர்க்கு மூடாமல்,மறைக்காமல்  நீ உதவு!!!!







 இது உதவி என்று கரம் நீட்டும் நெஞ்சங்களுக்கு உணவாகும் மருந்து-ஈகை
எவன் திருடன்?,யார் நல்லாள்? என்று அறியமுடியாத இக்காலத்தில் உதவும் குணம் நம்மிடையே குறைந்திருப்பதில் வியப்பில்லை.
அறிவிப்புபலகைகள் கழுத்தில் மாட்டியிருந்தாலும் குணம் நாடுவது கடினமே!
ஆனால் நியூட்டன் மூன்றாம் விதி சொல்வது,
நம் வினைக்கு,நிச்சயம் எதிர் வினை உண்டு.
நன்மைக்கு நன்மையையும்.
தீமைக்கு தீமையும்
அப்போ எதுவும் செய்யவில்லையென்றால், எதுவும் கிடையாது.
அதனால் தான் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று சொல்லி வைத்தார்கள்.
தீயவனுக்கு நாம் செய்யும் உதவி,"சில" நேரங்களில் அவனை நல்லவனாக்கவும் பயன்படும்.
நெருப்பைக் கண்டுபிடித்தவன் தனக்குள்ளேயே வைத்திருந்தால்,உலகம் இன்று இருட்டில்தான் இருந்திருக்கும்.
ஏன்,தமிழன் தான் கண்டுபிடித்த அறிய மருந்துகளை,அறிவியலை பிறருக்கும் கொடுத்திருந்தால்,இலக்கியத்தை மட்டும் அடையாளமாகக் கொண்டிருக்கும் தமிழினம்,விஞ்ஞான உலகிற்கே வித்தாக இருந்திருக்கும்.
ஆம்,தனக்கு தனக்கு என்று தனம் தேடுவோர்க்கு தகிக்கக்கூட தங்கம் தேவைப்படாது.
ஒரு உதாரணம் உண்டு,ஒரு மெழுகுவர்த்தி இன்னொரு மெழுகுவர்த்திக்கு நெருப்பை அளிப்பதால்,இழக்கப்போவது ஏதும் இல்லை.
இல்லாத ஒருவனுக்கு உதவும் போது,நாம் இறைவனாகிறோம்.
தன்  பெண்டு,தன் பிள்ளை என்று வாழ்பவன் கூட இறுதியில் மண்ணின்நுண்ணுயிர்களுக்கு இரையாகி உதவும் வகையில் தான் இயற்கை விதிகளை சமைத்துள்ளது.
நம் தேன்மழைத் தோழர்கள் கூறுவார்களே,"நல்ல எண்ணம் நல்ல செயலை உருவாக்கும்,நல்ல செயல் நல்ல வாழ்வை உண்டாக்கும்,நல்ல வாழ்வு மிகச்சிறந்த முடிவைத் தரும்"என்று,அதன்படி,ஈகை ஒரு நல்ல செயல்,அதன் பயன் என்ன என்பதை என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,

-காட்டுச்சிறுக்கி,
தேன்மழை

3 comments:

  1. நல்ல எண்ணம் நல்ல செயலை உருவாக்கும்,நல்ல செயல் நல்ல வாழ்வை உண்டாக்கும்,நல்ல வாழ்வு மிகச்சிறந்த முடிவைத் தரும்"

    அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நன்றிகள் அக்கா!!!.ஒரு விதைக்கு ஊத்துற முதசொட்டு தண்ணி மாதிரி புள்ள ஒரு நல்ல செயலுக்குக் கிடைக்கிற நல்ல பாராட்டுனு எங்க பச்சியக்கா அடிக்கடி சொல்லுவாங்க.ஆனா,'உங்களலாம் யாரும் பாக்கிறதில்ல போலனு இந்த விரட்டி பசங்க கிண்டல்பண்றாங்களேனு அவங்க வருத்தப்படுவாங்க.முதல்வேலையா அவங்ககிட்ட உங்க பாராட்டுகள சொல்லிடறேன்.

    -காட்டுச்சிறுக்கி

    ReplyDelete
  3. இப்படியும் இந்த காலத்தல பசங்க யோசிகராங்கலே னு வியப்பா இருக்கு.

    Your blogs are very much Positive minded. Good JOB

    ReplyDelete